வந்துருச்சு மெசேஜ்.. சென்னையின் சாலைகளில் இனி ஸ்பீடா போலாம்.. ரூ.810 கோடியாமே.. வேற லெவல் அறிவிப்பு
சென்னை: சென்னை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் சாலை பணி டெண்டரை பிப்ரவரி 15-க்குள் வெளியிட நகராட்சி நிர்வாகத்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் சமீபத்தில் பெய்த புயல், மழை பெரும் பாதிப்பை தந்துவிட்டது.. இதனால், பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டதுடன், சாலைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து, அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட உள்ளது.. மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து சாலைகளையும் சீரமைக்க மாநகராட்சி சார்பில் ரூ.810 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட உள்ளது.

அமைச்சர் நேரு: 4 நாட்களுக்கு முன்பு அமைச்சர் நேரு இதனை உறுதி செய்திருந்தார்.. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் பொறியாளர்களுக்கு புதிய வாகனங்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கியிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அறிவித்திருந்தார்.
"சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து சாலைகளையும் சீரமைக்க மாநகராட்சி சார்பில் ரூ.810 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட உள்ளதாகவும், அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்படுவதுடன், பாதாள சாக்கடை பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும்" அமைச்சர் நேரு கூறியிருந்தார்.
உத்தரவு: இந்நிலையில், சென்னை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் சாலை பணி டெண்டரை பிப்ரவரி 15-க்குள் வெளியிட நகராட்சி நிர்வாகத்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில் உள்ளதாவது: சென்னை மாநகராட்சியில் ரூ.250 கோடி, நகராட்சி நிர்வாக துறையில் ரூ.228 கோடி அளவுக்கு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி இயக்குநரகம் சார்பில் ரூ.38 கோடி என ரூ.500 கோடி அளவுக்கு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டரை பிப்ரவரி 15க்குள் வெளியிட நகராட்சி நிர்வாகத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பெருத்த நம்பிக்கை: டெண்டரை குறிப்பிட்ட காலத்தில் வெளியிட்டு சேதமான சாலைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகதுறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், சாலைப்பணிகள் துரிதமாகும் என்று நம்பப்படுகிறது.. இது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த நம்பிக்கையை தந்து வருகிறது.
-
வணிக காஸ் சிலிண்டர் ரூ.5000, 6000 என விற்பனை.. சென்னை,கோவையில் மூடப்படும் ஏராளமான உணவங்கள் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications