சென்னையில் லேடீஸ் ஸ்பெசல் ரயில் முழுவதும் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வியப்பு
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து பெண்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில் முழுவதும் சூப்பர் கிங்ஸ் அணியின் வண்ண புகைப்படங்கள் ஒட்டப்பட்டு இருப்பது பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஐபிஎல் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது. இந்த முறையும் சாம்பியன் படத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரைக்கு தினமும் 6 முறை மகளிர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயிலின் இருபுறங்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு இருப்பது பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி , ரெய்னா, ஜாதவ், பிராவோ உள்பட வீரர்களின் புகைப்படங்கள் ரயில் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications