தாம்பரத்தில் இப்படியா நடக்கணும்? சிக்கன் பிரியாணியுடன் வந்த தம்பி.. மறு நிமிஷமே அண்ணன் செய்த காரியம்
சென்னை: சென்னை தாம்பரத்தில் நடந்த சம்பவம் ஒன்று, சென்னையை உலுக்கி எடுத்து வருகிறது. இது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.
சென்னை அடுத்துள்ள தாம்பரத்தை சேர்ந்தவர் பாபு... இவர் குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் சந்தியா.. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.

சைவ பிரியர்: இதில் மூத்த மகன் தாரிஸ் தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் +1 படித்து வருகிறார்.. இவருக்கு 16 வயதாகிறது.. தாரிஸ் ஒரு தீவிர சைவ பிரியராம்.. அசைவ உணவுகளை சாப்பிடவே மாட்டாராம். இதற்காகவே வீட்டில் அசைவ உணவுகளை சமைப்பது கிடையாதாம்.
இந்த நிலையில் கடந்த 17ம் தேதி பக்ரீத் பண்டிகைக்காக, தாரிஸ் குடும்பத்தினருக்கு அருகிலிருந்த நண்பர்கள் பிரியாணி தந்திருக்கிறார்கள்.. இந்த மட்டன் பிரியாணியை தாரிசின் தம்பி கோகுல், வீட்டிலேயே வைத்து சாப்பிட்டுள்ளார்... இதைப்பார்த்ததும் அண்ணன் தாரிஸுக்கு கடும்கோபம் வந்துவிட்டது. இதுகுறித்து அண்ணன் தம்பியிடையே தகராறும் வெடித்துவிட்டது.
கோபம்: பிறகு ஆத்திரமடைந்த தாரிஸ், தன்னுடைய ரூமுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். கோபத்தில் வெளியில் வராமலேயே இருந்தார்.. குடும்பத்தினர் சமாதானம் செய்தும் அவர் கதவை பூட்டிக்கொண்டிருந்தார்.
ஆனால், மதியானம் உள்ளே போனவர், இரவு நேரமாகியும் வெளியே வரவேயில்லை.. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ரூமுக்குள் சென்று பார்த்தனர்.. அப்போதுதான் தாரிஸ் தூக்கில் தொங்கியபடியே கிடந்ததை பார்த்து அலறி துடித்தார்கள்.. உடனடியாக அவரை தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றார்கள்..
குரோம்பேட்டை: ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள், தாரிஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள்.. இதைக்கேட்டு தாரிஸின் குடும்பத்தினர் கதறி அழுத காட்சி காண்போரை கலங்கடித்துவிட்டது..
குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தாரிசின் சடலம் அனுப்பி வைத்த தாம்பரம் போலீசார், இது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகிறார்கள். வீட்டில் பிரியாணி சாப்பிட்டதில் ஏற்பட்ட தகராறில் இப்படி மரணம் வரை சென்றுவிட்டது தாம்பரத்தில் பெரும் சோகத்தை தந்துவிட்டது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications