சென்னை டூ தூத்துக்குடிக்கு புதிய வந்தே பாரத் ரயில்.. பயணிகள் நீண்ட கால ஏக்கம் நிறைவேறுது.. வெளியான குட் நியூஸ்
சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதேபோன்று தஞ்சை டூ ஓசுருக்கு ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்கவும் ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்து இருக்கிறது. ஏற்கனவே கடந்த மாதம் சென்னை எக்மோரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிவேகம், சொகுசு உள்ளிட்டவை காரணமாக வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், பல வழித்தடங்களில் தொடர்ச்சியாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

கூடுதல் வந்தே பாரத் ரயில்கள்
தமிழகத்தை எடுத்துக்கொண்டால், சென்னை - எழும்பூர், சென்னை - கோவை, சென்னை - நாகர்கோவில், சென்னை- பெங்களூர் உள்பட 8 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை தற்போது இருக்கை வசதிகள் கொண்ட ரயிலாக தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் உள்ளது. அதே போல, சென்னை- மதுரை, நெல்லை ரூட்களில் கூடுதல் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சென்னை டூ தூத்துக்குடிக்கு
இந்த நிலையில்தான், சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு ஒரு வந்தே பாரத் ரயிலையும் தஞ்சையில் இருந்து மைசூர் வழியாக ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்கவும் ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் சென்னை எக்மோரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலையில்தான் மேலும் 2 வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்து இருக்கிறது. இந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால் விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட நாள் கோரிக்கை
வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை சாதாரண ரயில்களை விட கட்டணம் அதிகம். ஆனாலும் முழுவதும் ஏசி வசதி, சொகுசான இருக்கைகள், பயோ டாய்லட் வசதி, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தற்போது முத்துநகர் ரயில் மட்டுமே உள்ளது.
தொழில் நகரமாகவும் திருச்செந்தூர் முருகன் கோயில் உள்ளிட்ட ஆன்மிக தலங்கள் நிறைந்த மாவட்டமுமாக இருக்கும் தூத்துக்குடிக்கு சென்னையில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
8 மணி நேரத்தில் சென்றடையும்
இந்த சூழலில்தான், சென்னை - தூத்துக்குடி ரூட்டில் புதிய வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டுள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சுமார் 8 முதல் 9 மணி நேரத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications