Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை டூ திருச்சி வெறும் 3 மணி நேரம்.. அசரடித்த ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் அட்டவணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் விரைவாக செல்ல விரும்பும் பயணிகளுக்காக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது.இந்த ரயிலில் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். தமிழ்நாட்டை பொறுத்தவரை வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதையடுத்து புதிதாக ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி வழியாக சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை ராமேஸ்வரம் இடையே இயக்கப்பட உள்ள இந்த ரயிலில் வெறும் ஏழு மணி நேரத்தில் ராமேஸ்வரம் போய்விட முடியும்.

சென்னையில் இருந்து திருச்சி செல்லவே ரயில்களில் ஆறு மணி நேரம் ஆகிறது. ஆம்னி பேருந்துகளே கண்டிப்பாக 7 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றன. அரசு பேருந்துகளில் 8மணி நேரம் வரை கூட ஆகிறது. சென்னையில் விமானத்தில் திருச்சி செல்ல ஒரு மணி நேரம் போதும் என்றாலும், கட்டணம் மிக அதிகம்.. அதேநேரம் வந்தே பாரத் ரயிலில் கிளம்பினால் நம்பவே முடியாத அளவிற்கு காலையில் கிளம்பி காலையிலேயே டிபனை திருச்சியில் சாப்பிட முடியும்.

Chennai to Trichy in just 3 hours Surprising Rameswaram Vande Bharat train schedule

ஆம்.. ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயிலில் தாம்பரத்தில் இருந்து காலை 5.52க்கு ஏறினால் காலை 9.20க்கு எல்லாம் திருச்சி போய்விட முடியும். இவ்வளவு விரைவாக எந்த ரயிலும் செல்லாது. எழும்பூரில் இருந்து கணக்கிட்டால், அதிகாலை 5.30க்கு புறப்பட்டு, திருச்சிக்கு காலையில் 9.20க்கு போய்விட முடியும். ராமேஸ்வரத்திற்கே ஏழு மணி நேரத்தில் சென்னையில் இருந்து போய்விடலாம்.. கட்டணம் சற்று கூடுதல் என்றாலும், மிக விரைவாக செல்ல விரும்பும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒரே நாளில் ராமேஸ்வரத்திற்கு போய்விட்டு, மறுபடியும் சென்னைக்கு திரும்ப வந்துவிட முடியும். அந்த அளவிற்கு வந்தே பாரத் வேகமாக செல்கிறது.

முன்னதாக ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ, ராமேஸ்வரம்-சென்னை வந்தே பாரத் ரயில் காரைக்குடி வழியாக இயக்கப்படுவதாக தற்காலிக நேர அட்டவணை வெளியாகியிருக்கிறது.

இந்த கால அட்டவணைப்படி, இந்த ரயில் சென்னையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5.52 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து காலை 7.20 மணிக்கும், திருச்சியில் இருந்து காலை 9.20 மணிக்கும், புதுக்கோட்டையில் இருந்து காலை 10 மணிக்கும், காரைக்குடியில் இருந்து காலை 10.40 மணிக்கும், சிவகங்கையில் இருந்து நண்பகல் 11.15 மணிக்கும், ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 12.15 மணிக்கும் புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது.

மறுமார்க்கமாக ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கும், சிவகங்கையில் இருந்து மாலை 4.10 மணிக்கும், காரைக்குடியில் இருந்து மாலை 4.40 மணிக்கும், புதுக்கோட்டையில் இருந்து மாலை 5.10 மணிக்கும், திருச்சியில் இருந்து மாலை 6.10 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து இரவு 8.15 மணிக்கும், தாம்பரத்தில் இருந்து இரவு 9.40 மணிக்கும் புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு சென்னை சென்றடைகிறது. இந்த ரயில் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற நாட்களில் இயக்கப்பட இருக்கிறது. ரெயில் இயக்கப்பட்ட பின்னர், நிறுத்தப்படும் இடங்கள் மற்றும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+