சென்னையில் சினிமா முடிந்து நள்ளிரவில் நடந்த வந்த இளைஞர்.. திருநங்கைகளால் நடந்த நம்ப முடியாத சம்பவம்
சென்னை: சென்னையில் ரயில்களில், பேருந்து நிலையங்களில், சாலைகளில், வலுக்கட்டாயமாக சில திருநங்கைகள் பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. எல்லா திருநங்கைகளும் அப்படி செய்வது இல்லை.. ஒரு சில திருநங்கைளே இப்படி செய்வார்கள். அப்படியான சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை திருநின்றவூரை சேர்ந்த ஆலன் ரோசாரியா என்ற என்ஜினியரை தாக்கி தங்க நகை கொள்ளையடித்த திருநங்கைகள், அவரது ஜிபே மூலம் பணமும் பறித்துள்ளார்கள். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் பேருந்து நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் திருநங்கைகள் யாகசம் பெறுவதை பார்த்திருப்பீர்கள். குறிப்பாக மின்சார ரயில்களில் எல்லா நேரங்களிலு திருநங்கைகள் யாசகம் பெறுவதை பார்த்திருப்பீர்கள். அதில் பலர் யாசகம் தரமறுப்பார்கள். இதை திருநங்கைகளும் கடந்து செல்வார்கள்.

ஆனால் ஒரு சில திருநங்கைகள், மிரட்டி, அசிங்கமாக பேசி காசு கேட்பதும் நடக்கும் நடக்கும். அதேபோல் பேருந்து நிலையத்திலும், நடந்து செல்லும் போதும், சிலர் பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்களும் நடப்பது உண்டு. அப்படித்தான் திருநங்கைகள் இரண்டு பேர் ஒரு இளைஞரை தாக்கி கொள்ளையடித்துள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னையை அடுத்த திருநின்றவூரை சேர்ந்த 24 வயதாகும் ஆலன் ரோசாரியா என்பவர், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கே.கே. நகரில் உள்ள சினிமா தியேட்டரில் இரவு காட்சி பார்த்து விட்டு, தான் தங்கியிருந்த விடுதிக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது திருநங்கைகள் இருவர் அவரை வழிமறித்தனர்.
ரோசாரியாவிடம் பணம் கேட்டுள்ளார்கள். அவர் என்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தார். திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி ரோசாரியாவின் செல்போனை பறித்தார்களாம். பின்னர் 'ஜிபே' மூலம் ரூ.300-ஐ அவர்கள் தங்களது வங்கி கணக்குக்கு அனுப்பினார்களாம். அத்துடன் ரோசாரியா அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியையும் கொள்ளையடித்துவிட்டு திருநங்கைகள் இருவரும் தப்பி சென்று விட்டார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக ரோசாரியா அளித்த புகாரின் பேரில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பணம் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்ட திருநங்கைகள் சாந்தி (28), சாய்னா (19) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். நள்ளிரவு வேளையில் திருநங்கைகள், தங்க நகையை பறித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications