வளசரவாக்கத்தில் குஷி.. சென்னை மாநகராட்சியின் "ஸ்மார்ட்".. 24 மணி நேரமும் "நான்-ஸ்டாப்" கொண்டாட்டம்
சென்னை: சென்னை மாநகராட்சியின் அடுத்த அதிரடி கிளம்பியிருக்கிறது.. இதுகுறித்த கூடுதல் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது எல்லா துறைகளுமே டிஜிட்டல் மயமாகி வருகின்றன.. அந்தவகையில், ஸ்மார்ட் மீட்டர்களை விரைவில் தமிழகம் முழுக்க பொருத்தப்படும் என்று மின்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.. இதனால், மின்கட்டண முறை இன்னும் எளிதாகும் என்றும், கட்டண வசூலில் முறைகேடுகள் இருக்க வாய்ப்பே இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

மின்கட்டணம்: இந்த வரிசையில், சென்னை மாநகராட்சியின் மெட்ரோ குடிநீர் இணைப்பிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.. காரணம், சென்னையில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்கு தற்போது குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது..
அந்தவகையில், தினமும் சுமார் 2 முதல் 3 மணிநேரம் மட்டுமே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.. இதற்கு மாற்றாகத்தான், குடிநீர் இணைப்பில் புதிதாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது..
ஸ்மார்ட் மீட்டர்: தண்ணீர் பயன்படுத்தும் அளவை கணக்கிடவே, இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது.. அந்தவகையில் எப்படியும் அடுத்த சில மாதங்களுக்குள் அனைத்து அடுக்குமாடி கட்டிடங்களிலும் தண்ணீர் மீட்டர்களை நிறுவ மெட்ரோ வாட்டர் திட்டமிட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இதற்கான பணிகளை தற்போது மெட்ரோவாட்டர் தொடங்கிவிட்டதாம்.. குறிப்பாக, வளசரவாக்கம் மண்டலத்தில் மெஜஸ்டிக்காலனி(வார்டு152), ராமகிருஷ்ணாநகர் (வார்டு149) பகுதியில் 8212 வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளில் இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி ரூ.69.64 கோடிமதிப்பீட்டில் நடைபெற்று வருகிறதாம்.
குடிநீர்தொட்டிகள்: அந்தவகையில், குடிநீர் சப்ளை செய்வதற்காக மெஜஸ்டிக் காலனியில் 19 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியும், பூமிக்கு அடியில் 8 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும், ராமகிருஷ்ணா நகரில் 29 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியும் பொருத்தப்பட்டிருக்கின்றன..
இதற்காக 100 மி.மீட்டர் முதல் 450 மி.மீட்டர் விட்டம் வரையிலான குடிநீர் பைப்புகள் சுமார் 84 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்க உள்ளார்களாம். இதுவரை சுமார் 2420 வீடுகளில் இந்த ஸ்மார்ட் குடிநீர் மீட்டர் பொருத்தும் பணி முடிவடைந்திருப்பதாகவும், மிச்ச பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஆகமொத்தம், இந்த பகுதிகளில் 24 மணிநேரமும் தண்ணீர் வினியோகிக்கப்படுவதுடன், 70 ஆயிரம் பேர் இதன்மூலம் பயன் அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications