சென்னையில் இன்று "பயங்கரமான" இரவு.. எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்! என்ன மேட்டர் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடைக் காலம் முடியும் தறுவாயிலும் கூட சென்னையில் வெப்பம் நம்மை வாட்டி வதைக்கும் நிலையில், இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சில முக்கிய கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

கோடைக் காலம் தொடங்கியது முதலே வெப்பம் நம்மை வைத்துச் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாகக் கடந்த பிப். மாதமே வெப்பம் சில இடங்களில் 100 டிகிரியை தொட்டது. கடந்த 100 ஆண்டுகளில் பிப். மாதம் இந்தளவுக்கு வெப்பம் பதிவானதே இல்லை.

அதன் பின்னரும் கூட வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் பல இடங்களில் வெப்பம் 100ஐ தொட்டது. வட மாநிலங்களில் பல இடங்களில் வெப்ப அலையும் கூட வீசியது.

 Chennai will have horrible night says Tamilnadu weatherman pradeep john

சென்னை: இந்த அளவு கடந்த வெப்பத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சில இடங்களில் மதிய நேரங்களில் வெளியே வரவே முடியாத அளவுக்கு வெப்பம் உச்சத்தில் இருந்தது. கடந்த மே மாதம் மோச்சா புயல் காரணமாக சில நாட்கள் மழை பெய்தாலும் கூட அதன் பின்னர் பெரியளவில் மழை பெய்யவே இல்லை. கடுமையான வெப்பமே வாட்டி வதக்கியது.

நேற்றைய தினம் எல்லாம் வெப்பம் சென்னையில் 106 டிகிரியை கூட அடைந்தது. இன்றைய தினம் வெப்பம் அந்தளவுக்கு இல்லை என்றாலும் கூட வறண்ட ஒரு வானிலையே நிலவி வந்தது. மாலை 5- 5.30 வரையிலும் கூட வெப்பம் குறைய வில்லை. இதற்கிடையே இன்றைய தினம் சென்னையில் வெப்பம் எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சில முக்கிய கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

 Chennai will have horrible night says Tamilnadu weatherman pradeep john

பயங்கரமான இரவு: அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாலை 5.30 மணி ஆகிறது. இன்னும் சென்னையில் 38 C (100.4 பாரன்ஹூட்) வெப்பம் இருக்கிறது. கடல் காற்று சுத்தமாக இல்லை. இன்று ஒரு பயங்கரமான இரவாக இருக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார். அதாவது வெப்பம் நேற்றைப் போலக் கொடூரமாக இருக்காது என்ற போதிலும், இன்று இரவு வெப்பத்தைப் புழுக்கம் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.

முன்னதாக மாலை 3.30 மணியளவில் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில் அவர், "இப்போது வரை சென்னையில் கடல் காற்று வீசுவதற்கான அறிகுறியே இல்லை.. நேற்று போல் வெப்பம் அதிகமாக இருக்காது என்றாலும் கடல் காற்று லேட் ஆனால் மிக மோசமாக இருக்கும். ஆனால் இதனால் சென்னைக்கு மேற்கே காஞ்சிபுரம் / திருவள்ளூர் பெல்ட் அருகே மேற்கு திசையில் மீண்டும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

வானிலை மையம்: இதற்கிடையே வானிலை ஆய்வு மையமும் வரும் நாட்களில் தமிழ்நாட்டில் என்ன மாதிரியான வானிலை இருக்கும் என்பது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதேபோல வரும் ஜூன் 6 முதல் 8 வரையிலான தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+