சமையல் மாஸ்டர் கணவனுடன் சண்டை.. சென்னை பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு! நிர்கதியாய் 2 பிஞ்சுகள்!
சென்னை: சமையல் வேலை செய்து வந்த கணவனை பிரிந்து வசித்து வந்த பெண் காவலர் ஒருவர் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலத்த அதிபர்களை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், அவரது செல்போனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2020ஆம் ஆண்டு தமிழக போலீசில் நேரடியாக பணியில் சேர்ந்த கார்த்திகா ராணி, சில மாதங்களுக்கு முன்வரை டி.பி. சத்திரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வந்தார். பின்னர் அவர் அண்ணா நகர் போக்குவரத்து பிரிவிற்கு மாற்றப்பட்டு பணிபுரிந்து வந்தார்.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு திருமணமானது. அவர் சமையல் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு 8 வயது மகனும் 6 வயது மகளும் உள்ளனர். குடும்பத்துடன் டிபிசத்திரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக பிரிந்து, தனது குழந்தைகள் உடன் வாழ்ந்து வந்தார்.

பெண் காவலர்
இதற்கிடையே கடந்த சில நாட்களாக குடும்ப தகராறு மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்று வீடு திரும்பிய அவர், இரவு நேரத்தில் வீட்டு உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மர்ம மரணம்
சிறிது நேரத்தில் கார்த்திகா ராணியின் அண்ணனின் நண்பரான காவலர் அபினேஷ், அவரை பார்க்க வீட்டுக்கு சென்றபோது, அவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீஸ் விசாரணை
தகவல் கிடைத்ததும் டிபி சத்திரம் போலீசார் விரைந்து சென்று நிகழ்விடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 174 CrPC பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, குடும்ப தகராறா? பணிச்சுமையா? அல்லது பிற தனிப்பட்ட பிரச்சனைகளா? எனப் பல்வேறு கோணங்களில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குடும்ப பிரச்சனை
கார்த்திகா ராணி வசித்து வந்த வீட்டில் அவர் ஏதேனும் கடிதம் எழுதி வைத்திருக்கிறாரா? அல்லது அவரது செல்போனில் தற்கொலை தொடர்பான ஏதேனும் தகவல் உள்ளதா? என்பதையும் போலீசார் முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக அவரது மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டு டிஜிட்டல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக மன அழுத்தம் அதிகரித்து இருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications