ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டையில் மிரட்டும் கொரோனா... வெளியானது சென்னையின் லிஸ்ட்
சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 510 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,640 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5967 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17728 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 11640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5504 பேர் குணம் அடைந்துள்ளனர். 89 பேர் மரணம் அடைந்துவிட்டனர். மீதமுள்ள 5967 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் உள்ள 15 மாவட்டங்களில் ராயபுரம், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, திருவிகநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னை அருகே நோக்கியா ஆலையில் அடுத்தடுத்து 42 பேருக்கு கொரோனா.. மூடப்பட்ட ஆலை.. பரபரப்பு தகவல்
மே 27ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அவற்றை இப்போது பார்ப்போம். அடைப்புக்குறிக்குள் நேற்று பாதிக்கப்பட்டவர்கள் விவரம்.
திருவெற்றியூர்: 344 (322)
மணலி: 156 (152)
மாதவரம் 256 (237)
தண்டையார் பேட்டை 1160 (1096)
இராயபுரம் 2146 (2065)
திருவிக நகர் 1285 (1253)
அம்பத்தூர் 484 (472)
அண்ணா நகர் 975 (924)
தேனாம்பேட்டை 1262 (1188)
கோடம்பாக்கம் 1525 (1488)
வளசரவாக்கம் 755 (740)
ஆலந்தூர் 157 (132)
அடையாறு 653 (619)
பெருங்குடி 203 (185)
சோழிங்கநல்லூர் 197 (184)
எந்த மண்டலத்தில் எத்தனை பேர் குணம் அடைந்துள்ளனர் மற்றும் உயிரிழந்துள்ளனர், மருத்துவமனையில உள்ளார்கள் என்ற விவரத்தையும் சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.