Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் 4375 ஏக்கரில் 6வது பிரம்மாண்ட நீர் தேக்கம்.. ஓஎம்ஆர்-ஈசிஆர் சாலையில்.. தொடங்கிய அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தற்போது செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி, தேர்வாய் கண்டிகை ஆகிய ஐந்து குடிநீர் தேக்கங்கள் உள்ளன. இந்த ஐந்து பெரிய ஏரிகளின் மூலமும், கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும், தெலுங்கு கால்வாய் திட்டம் மூலம் கிருஷ்ணா நதி மூலம் குடிநீர் கிடைக்கிறது. இந்நிலையில் சென்னையில் ஆறாவதாக புதிய நீர் தேக்கம் திருப்போரூர் பகுதியில் 4375 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பம் அளித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சுமார் ஒன்றரை கோடி பேர் இருக்கிறார்கள். இந்த மக்களின் குடிநீர் தேவையை புறநகர் பகுதிகளில் உள்ள பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய 5 நீர்தேக்கங்களில் இருந்து பெறப்படும் நீர் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இதனுடன் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியிலிருந்தும் நீர் பெறப்பட்டு வருகிறது. சராசரியாக மாதம் ஒன்றுக்கு தற்போது 1 டி.எம்.சி. வரை நீர் சென்னைக்கு தேவைப்படுகிறது.

Chennai s 6th reservoir between Old Mamallapuram-East Coast Road seeking environmental clearance

பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, நீர்த்தேக்கங்களுக்கு ஆந்திர மாநில அரசுடன் செய்து கொண்ட கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுக்கு 12 டி.எம்.சி. நீர் பெறப்படுகிறது. இதனுடன் பருவகால மழையால் பெறப்படும் நீர் சேமிக்கப்பட்டு, வினியோகிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சென்னை மாநகரம் விரிவடைந்து செல்வதுடன், மக்கள்தொகையும் அதிகரித்து கொண்டே செல்வதால் கூடுதலாக நீர்தேக்கங்கள் தேவைப்படுகிறது. இதனால் கடந்த பட்ஜெட் அறிவிப்பின்படி கோவளம் அருகே சென்னையில் ஆறாவதாக புதிய நீர் தேக்கம் திருப்போரூர் பகுதியில் 4375 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தது.

பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு கூறுகையில், "சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள நீர் ஆதாரங்கள் , கடல் நீர் ஆதாரங்கள் மூலம் கிடைக்க பெறும் குடிநீரை கொண்டு சென்னை மாநகரின் குடிநீர் தேவை நிறைவு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வருவதாலும், மாறி வரும் பருவ நிலை மாற்றத்தினால் அவ்வப்போது ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டினை நீக்கவும் புதிய நீர்தேக்கங்களை அமைப்பது இன்றியமையதாதது ஆகும்.

அந்த வகையில் சென்னைக்கு அருகே உள்ள கோவளம் உபவடிநிலத்தில் பருவ காலங்களில் கிடைக்கும் வெள்ள நீரின் ஒரு பகுதியை செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில் பழைய மகாபலிபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் 4375 ஏக்கர் அரசு நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில் சுமார் 1.6 டிஎம்சி கொள்ளவில், ஆண்டிற்கு 2.25 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்கும் அளவிற்கு சென்னையின் ஆறாவது நீர்தேக்கமாக புதிய நீர் தேக்கம் அமைக்கப்படும்.

அந்த 4375 ஏக்கர் அளவு நீர் தேக்கம் 350 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வாரு ஆண்டும் கிடைக்கக்கூடிய 160 எம்எல் குடிநீரை கொண்டு , சென்னை மக்களின் குடிநீர் தேவை, குறிப்பிடத்தக்க அளவில் நீண்ட காலத்திற்கு நிறைவு செய்யப்படும்.. இந்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில நீர் வளத்துறைக்கு 9460 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு கூறினார்.

இந்த புதிய நீர் தேக்கம் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, 'பழைய மாமல்லபுரம்-கிழக்கு கடற்கரைச் சாலைகளுக்கு இடையே ரூ.471 கோடியில் 4 ஆயிரத்து 375 ஏக்கரில் இந்த நீர் தேக்கம் அமைய உள்ளது. ஆண்டுக்கு 2.25 டி.எம்.சி. வெள்ளநீரை சேமிக்கும் வகையிலும் இந்த புதிய நீர் தேக்கம் அமைய உள்ளது. கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. அனுமதி கிடைத்த உடன் பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது" என்று கூறினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+