மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு.. சென்னையில் இன்று 5 மணிநேரம் மின்தடை! ஏரியா லிஸ்ட் இதோ
சென்னை: மின்வாரிய பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் இன்று (16.08.2024) சில இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது. பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு மதியம் 2 மணிக்கு பிறகு மீண்டும் மின்சப்ளை கொடுக்கப்பட உள்ளது.
சென்னை உள்பட மாநிலம் முழுவதும் முறையாக மின்சாரம் வழங்கும் நோக்கத்தில் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணி என்பது நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணியின்போது மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

அந்த வகையில் இன்றும் (வெள்ளிக்கிழமை) சென்னையில் சில இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது:
சென்னையில் 16.08.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அடையாறு, மணலி மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
அடையாறு: காந்தி நகர் (பகுதி), கேனால் பேங்க் சாலை, காந்தி நகர் 2வது பிரதான சாலை, 3வது கேனால் குறுக்கு சாலை உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் சப்ளை என்பது இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணலி: நெடுஞ்செழியன் சாலை, கலைஞர் நகர், சிபிசிஎல் நகர், பாடசாலை தெரு ஒரு பகுதி, வையக்காடு, 200 அடி சாலை மணலி, சடையங்குப்பம், பர்மா நகர், இருளம் காலனி, எலந்தனூர், பொன்னேரி நெடுஞ்சாலை, ராஜீவ் காந்தி நகர், எம்எம்டிஏ முதல் மற்றுமு் இரண்டாம் கட்டம், துவாரகா நகர், ஆண்டார்குப்பம் சோதனை சாவடிகளில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
ஏசிசி மெயின் ரோடு, மெட்டல் மற்றும் இந்தோ டெக், சாத்தங்காடு ஸ்டீல் யார்டு, கோத்தாரி ஆலை, ராஜாஜி நகர், கார்கில் நகர், ராமசாமி நகர், சத்தியமூர்த்தி நகர், விபி நகர், பெரியதோப்பு, சின்னமாத்தூர் சாலை, வஊசி நகர், புதுக்கோவில் தெரு, சந்தான கிருஷ்ண சாலை, விமலாபுரம் மற்றும் ஐஏஎல் தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் இன்று மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications