கையில் குடை! செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளை ரசித்த முதல்வர் ஸ்டாலின்! குடும்பத்தினருடன் திடீர் விசிட்
சென்னை: செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் நட்சத்திர விடுதிக்கு முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் விசிட் அடித்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தலைநகர் சென்னையில் முதல்முறையாக நடைபெறுகிறது. ஜூலை 28இல் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வரும் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ள நிலையில், இதுவரை இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள அனைத்து அணிகளுமே மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது.

செஸ் ஒலிம்பியாட்
இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் ஆண்கள் பிரிவில் 3 அணிகளும் பெண்கள் பிரிவில் மூன்று அணிகளும் கலந்து கொண்டு உள்ளனர். சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த பல வீரர்- வீராங்கனை கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் நேற்று வரை 7 சுற்றுப் போட்டிகள் நடைபெற்ற முடிந்து உள்ளன. இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாராட்டு
இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்- வீராங்கனைகள் தங்க ஏதுவாக மாமல்லபுரத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சொகுசு விடுதி, போட்டி நடைபெறும் இடங்கள் முழுவதுமாக போலீசார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்குத் தமிழ்நாடு அரசு மிக சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

வெளிநாட்டு வீரர்கள்
குறிப்பாக வெளிநாட்டு வீரர்கள் போட்டியின் ஏற்பாடுகளையும் வரவேற்பு உள்ளிட்ட உபசரிப்புகளையும் பாராட்டி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து தாங்கள் எந்தவொரு பிரச்சினையையும் சந்திக்கவில்லை என்று பாராட்டி வருகின்றனர். விடுதிகளில் வழங்கப்படும் தென்னிந்திய உணவுகளையும் செஸ் வீரர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
இந்தச் சூழலில் நேற்று மாமல்லபுரத்தில் 7ஆம் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. அப்போது முதல்வர் ஸ்டாலின் போட்டி நடைபெறும் இடத்திற்கு குடும்பத்தினருடன் திடீர் விசிட் அடித்தார் முதலில் வீரர்கள் தங்கும் நட்சத்திர விடுதியைப் பார்வையிட்டார். அங்குள்ள வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். அடுத்து போட்டி நடைபெறும் இடத்திற்குச் சென்று, மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.
Recommended Video

குடை பிடித்தபடி
முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து அங்கு அமைந்து இருந்த சுற்றுலாத்துறை அரங்கைப் பார்வையிட்டார். அங்கு வெளிநாட்டு வீரர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளையும் அவர் கண்டு களித்தார். இரவு நேரத்தில் பனிப்பொழிவு சற்று அதிகமாக இருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் குடை பிடித்தபடி கலை நிகழ்ச்சிகளை ரசித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications