தவெக ஆட்சி கலைந்துவிடும் என சொல்வது உகந்ததல்ல.. ஸ்டாலின் பேச்சால் வீரபாண்டியன் அப்செட்!
சென்னை: விஜய்யின் தவெக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்.. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடக்கலாம் என முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியிருந்த நிலையில் இது பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், தவெக ஆட்சி கலைந்துவிடும் என சொல்வது உகந்ததல்ல.. இத்தகைய கருத்துகள் அவருடைய உயரத்துக்கு பொருத்தமானது இல்லை என்று கூறினார்.
விஜய் தவெக அரசு திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து வருகிறது. இந்த சூழலில் எப்போது வேண்டுமானாலும் இந்த அரசு கவிழலாம் என முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் கூறியதாவது:-

ஜனநாயகத்திற்காக.. நாட்டு நலனுக்காக.. தமிழ் மண்ணின் உரிமைகளுக்காக.. எங்களால் ஜனநாயக சக்திகளுடன் இணைந்தும் களமாட முடியும், தனித்தும் களமாட முடியும் என்று இந்த நேரத்தில் நான் பதிவு செய்கிறேன்" என்று கூறினார். அப்போது தவெக ஆட்சி விரைவில் கவிழும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த வீரபாண்டியன் கூறியதாவது:-
அவரது உயரத்துக்கு பொருத்தமானது இல்லை
மு.க ஸ்டாலின் முன்னாள் முதல்வர், பழுத்த அரசியல் தலைவர். கலைஞர் போன்றவர்களிடம் அரசியல் பயின்றவர். ஜனநாயகத்தில் இதுபோன்ற கருத்துகள் ஏற்புடையது அல்ல. இப்போதுதான் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. மக்கள் அந்த அரசுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். எனவே, மக்கள் அளித்த தீர்ப்பை நாம் வழிமொழிய வேண்டும்.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஜனநாயக கட்சியின் தலைவர் என்ற முறையில் ஜனநாயகத்தின் வழியில் நிற்க வேண்டும். சட்டப்படி இந்த ஆட்சி நடைபெற வேண்டும் என்றுதான் அவர் சொல்ல வேண்டும். எனவே இத்தகைய கருத்துகள் அவருடைய உயரத்துக்கு பொருத்தமானது இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications