Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 பேரின் கெரியரே காலி.. அந்த மூத்த வீரர் வேறயா? சேத்தன் சர்மா பேச்சால்.. கசிந்த இந்திய அணி சீக்ரெட்

பிசிசிஐ அமைப்பு இதனால் சேத்தன் சர்மா மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மாவின் ஸ்டிங் வீடியோ பேச்சுக்கள் கிரிக்கெட் உலகை உலுக்கி போட்டுள்ளன. முக்கியமாக அவர் 3 வீரர்களின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசிய சில விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பல்வேறு ரகசியங்களை ஜீ நியூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு புலனாய்வு செய்தி மூலம் வெளியிட்டு உள்ளது. இந்திய அணி குறித்து அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த பல விஷயங்களை இந்த ஆபரேஷன் உண்மை என்று உறுதி செய்துள்ளது.

இந்திய அணியில் வீரர்கள் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதும், கோலிக்கு எதிராக கேப்டன்சி நீக்கத்தின் போது பல்வேறு அரசியல்கள் செய்யப்பட்டதும் இந்த ஆபரேஷன் மூலம் உறுதியாகி உள்ளது.

தேர்வாளர்

தேர்வாளர்

அதில், இந்தியாவின் முன்னாள் கேப்டன் கோலி - கங்குலி இடையே இருந்த மோதல் பற்றி சேத்தன் சர்மா பேசி இருக்கிறார். அதேபோல் கோலி - ரோஹித் சர்மா இடையே இருக்கும் ஈகோ மோதல் பற்றியும் பேசி இருக்கிறார். இது போக கேப்டன் பதவி பெறுவதற்கு முன் ஹர்திக் பாண்டியா தனது வீட்டிலேயே தவமாக தவம் கிடந்தது பற்றியும் சேத்தன் சர்மா பேசி இருக்கிறார். முக்கியமாக இந்திய அணியில் வாய்ப்பு பெறுவதற்காக சிலர் அடிக்கடி சேத்தன் சர்மா வீட்டிற்கு சென்றதும், அவரிடம் நட்பாக இருந்ததும் உறுதியாகி உள்ளது. சேத்தன் சர்மாவிடம் இப்படி இறங்கி போகாதவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் உறுதியாகி உள்ளது.

நீக்கம்

நீக்கம்

பிசிசிஐ அமைப்பு இதனால் சேத்தன் சர்மா மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் இப்போதுதான் பணியில் சேர்க்கப்பட்டார். விரைவில் பணியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்டிங் ஆபரேஷன் தொடர்பாக ரோஜர் பின்னி மற்றும் ஜெ ஷா இருவருக்கும் தகவல்கள் சென்றுள்ளன. இரண்டு பேருமே இந்த வீடியோக்களை பார்த்து சேத்தன் சர்மா மீது கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக் கோப்பை தோல்விக்கு பின் சேத்தன் சர்மா நீக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் சேர்க்கப்பட்ட அவர் தற்போது மீண்டும் நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பரபரப்பு

பரபரப்பு

முக்கியமாக அவர் 3 வீரர்களின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசிய சில விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேத்தன் சர்மா தனது பேச்சில், சஞ்சு சாம்சனை அணியில் எடுக்கவில்லை என்றால் அது பெரிய பிரச்சனை ஆகும். ட்விட்டரில் பேன்ஸ் கடுமையான புகார்களை வைக்க வாய்ப்புகள் உள்ளன. நாம் சஞ்சுவை தேர்வு செய்யவில்லை என்றால் நமக்கு எதிராக ரசிகர்கள் புகார் வைப்பார்கள் என்று கூறி உள்ளார். மேலும் ஒருநாள் போட்டியில் கில் இரட்டை சதம் அடித்துள்ளார். அதேபோல் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து உள்ளார்.

இரட்டை சதம்

இரட்டை சதம்

இதனால் இந்திய அணியில் 3 பேருக்குத்தான் சிக்கல். 2 விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் கே எல் ராகுல், சஞ்சு சாம்சன் எதிர்காலம் இதனால் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. அதேபோல் ஓப்பனிங் வீரர் ஷிகர் தவான் எதிர்காலமும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. இஷான் கிஷன், கில் இருவரும் தொடர்ச்சியாக ஆடி வருகிறார்கள். ரோஹித் சர்மா இனி டி 20 அணியில் இருக்க மாட்டார். ஹர்திக் பாண்டியா எதிர்காலத்தில் நிரந்தர கேப்டனாக இருப்பார், என்று சேத்தன் சர்மா தனது பேச்சில் குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+