நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கிய வழக்கு.. சிதம்பரம் தீட்சிதருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய வழக்கில் தீட்சிதருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய வழக்கில் தீட்சிதருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 16 ம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்ய கோரிய பெண்ணை தீட்சிதர் தாக்கிய சம்பவம் இணையதளங்களில் வைரலாக பரவியது.இது தொடர்பாக தீட்சிதர் மீது சிதம்பரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கோரி தீட்சிதர் தர்ஷன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி,
15 நாட்கள் ராமேஷ்வரத்தில் தங்கியிருக்க வேண்டும், ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் முன் 15 நாட்களும் கையெழுத்து இட வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் செயல் அலுவலர் முன் 15 நாள் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
மேயர் உள்ளிட்ட பதவிக்கு மறைமுகத் தேர்தலுக்கு எதிர்ப்பு.. உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு