அன்னையர் தினத்தில் அன்பு மழை! தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னை: உலக அன்னையர் தினமான இன்று, தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்று மகிழ்ந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வரும் தயாளு அம்மாள் வயது மூப்பு காரணமாக முழு ஓய்வில் இருந்து வருகிறார். கருணாநிதி மறைவுக்கு பிறகு உடல்நலிவுற்ற நிலையில் இருந்து வரும் தயாளு அம்மாளை அவரது குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் வாரத்திற்கு 4 முறையாவது கோபாலபுரம் இல்லம் சென்று தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரிக்கத் தவறுவதில்லை.
அதேபோல் மற்ற பிள்ளைகளான செல்வி, தமிழரசு உள்ளிட்டோரும் அடிக்கடி கோபாலபுரம் இல்லம் சென்று தங்கள் தாயாரை கவனித்துக் கொள்கின்றனர்.
மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருப்பதை ஒரு தாயாக தயாளு அம்மாவால் ஏற்க முடியவில்லை. அந்தக் கவலையும் அவருக்கு உள்ளூர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே இன்று தனக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு ஆசி பெற வந்த முதலமைச்சர் ஸ்டாலினை, உச்சிமுகர்ந்து ஆசி வழங்கியதுடன் கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை பகிர்ந்தார்.

இந்நிலையில் உலக அன்னையர் தினம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் அன்னையர் தினம் வாழ்த்துகள்.
'' அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்.''












Click it and Unblock the Notifications