Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாநகராட்சி வரலாற்றில் இது தான் ரெக்கார்டு! நான் மேயராக இருந்தப்போ! பழைய நினைவலைகளை பகிர்ந்த ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பேசிய போது தனது பழைய நினைவலைகளை பகிர்ந்துகொண்டார். அதன் விவரம் வருமாறு;

மாநகராட்சி வரலாற்றில்: நான் சென்னை மாநகரத்தின் மேயராக இருந்தபோது, 10 மேம்பாலங்கள் கட்டினோம். இதுவரைக்கும் சென்னையைப் பொறுத்தவரைக்கும் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய எந்த மாநகரமாக இருந்தாலும், மேம்பாலங்கள் கட்டுவது என்பது மாநகராட்சியின் வேலையல்ல. அது பொதுப்பணித் துறைதான் கட்டவேண்டும். ஒன்றிய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் தான் கட்டவேண்டும். நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கட்டுவார்கள். மாநகராட்சி கட்டிய வரலாறே கிடையாது.

Chief Minister Stalin, shared his old memories about his 1996-2001 mayor period

மாநகரத்தின் மேயர்: ஆனால் 1996-லிருந்து 2001 வரைக்கும், அதற்குப் பிறகு 2006-இல் இருந்து தொடர்ந்து நான் இந்த மாநகரத்தின் மேயராக இருந்தபோது 10 மேம்பாலங்களைப் போக்குவரத்தின் நெரிசலின் அடிப்படையில் கட்டவேண்டும் என்று முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டோம். வேகப்படுத்தினோம், விரைவுப்படுத்தினோம். அந்தப் பாலங்களைக் கட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்கப்பட்டு, அந்தக் காலத்திற்குள் 10 பாலங்களையும் கட்டி முடிக்கவேண்டும் என்று முடிவெடுத்தோம்.

டெக்னிக்கல் பிரச்சினை: ஆனால் 10 பாலங்களில் ஒரு பாலம் பெரம்பூரில் இருக்கக்கூடிய மேம்பாலம். அதில் சிறிது டெக்னிக்கல் பிரச்சினை இருந்தது. அதனால், விரைவாக குறித்த நேரத்தில் கட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் சிறிது தடைபட்டது. ஆனால் மீதம் இருக்கக்கூடிய 9 மேம்பாலங்களைக் குறித்த காலத்தில் மட்டுமல்ல, குறித்த காலத்திற்கு முன்பே கட்டிமுடித்த பெருமை நமக்குண்டு.

இதுதான் ரெக்கார்டு: அதற்குப் பிறகு, ஆட்சி மாற்றம் வந்தது. ஆட்சி மாற்றம் வந்த காரணத்தினால், அந்தப் பெரம்பூர் பாலம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதை ஏன் கிடப்பில் போட்டார்கள் என்ற விஷயத்தை நான் சொல்கிறேன். அது ஒரு பெரிய விஷயம். ஆனால் அதற்குப் பிறகு நாம் மீண்டும் ஆட்சிக்கு வருகிறோம். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, நாம் ஆட்சியிலிருந்தபோது அடிக்கல் நாட்டிப் பாதி பணியை முடித்து டெக்னிக்கல் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தப் பாலம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு நம்முடைய தலைவர்தான், எந்தத் தலைவர் அடிக்கல் நாட்டினாரோ அதே தலைவர் கலைஞர் அவர்கள் அந்தப் பாலத்தைத் திறந்து வைத்தார். இதுதான் ரெக்கார்டு.

இன்னொரு அதிசயம்: அதோடு இன்னொரு அதிசயம் என்ன என்று கேட்டால், சென்னை மாநகரத்தில் கட்டியபோது எவ்வளவு காலத்திற்குள் கட்டிவிடுவோம் என்று சொன்னோமோ, அந்த காலத்திற்குள் கட்டிமுடித்தோம் என்பது மட்டுமல்ல, எந்த மதிப்பீட்டில் கட்டிமுடிக்கவேண்டும் என்று சொன்னோமோ அதைவிடக் குறைவாக அந்தப் பாலத்தைக் கட்டிமுடித்தோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இடையில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அந்தப் பாலத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று ஒரு வழக்கு போட்டார்கள். ஜெயலலிதா ஆட்சியில் அந்த வழக்கு போட்டார்கள்.

இரவோடு இரவாக: இரவோடு இரவாக, தலைவர் கலைஞரைக் கைது செய்த கொடுமையை எல்லாம் பார்த்திருப்பீர்கள். அதையெல்லாம் இங்கே சொல்ல விரும்பவில்லை. ஒரு நல்ல நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த சோகமான நிகழ்ச்சியை எல்லாம் இங்கே எடுத்துக் கூற விரும்பவில்லை. கலைஞரைக் கைது செய்தபோது, அன்றைக்கு ஒரு பொதுநல வழக்காக நம்முடைய புருஷோத்தம் தொடுத்தார்.

நீதிபதி என்.கே. ஜெயின்: அந்த பொதுநல வழக்கை தொடுத்த காரணத்தினால்தான் அன்றைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என்.கே. ஜெயின் அவர்கள் அதை விசாரித்து ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனத்தைத் தெரிவித்து உடனடியாக விடுதலை செய்தார். இதுதான் புருசோத்தமனுக்கும், நம்முடைய இயக்கத்திற்கும், இயக்கத்தில் இருக்கக்கூடிய தலைவருக்கும் உள்ள வரலாறு என்பதை நான் பெருமையோடு இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+