மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமூல் தொல்லையில் இருந்து எங்களை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு காப்பாற்றி விட்டது. இதேநிலை தொடர்ந்து நீடித்தால் மகிழ்ச்சிதான். இதுபோல கூடுதலாக டாஸ்மாக் பணியாளர்கள் கொடுத்து கொண்டு இருக்க வேண்டிய தொகையையும், டாஸ்மாக் நிறுவனமே வழங்கி விட்டால் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கும் நிலையே வராது. கேரளாவை போல் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வும் வழங்கவேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொது செயலாளர் தனசேகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் 4,787 டாஸ்மாக் கடைகள் இருந்தன. முதல்வராக விஜய் கடந்த மே 10ம் தேதி பொறுப்பேற்றவுடன் கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகள், பார்களை மூடவேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி, 717 கடைகள் அடையாளம் காணப்பட்டு அந்த கடைகள் மூடப்பட்டு வருகின்றன. இதுவரை 525 கடைகள் மூடப்பட்டுவிட்டன. மீதமுள்ள கடைகள் மூடும் பணிகள் நடக்கிறது.

Chief Minister Vijay has saved us from the menace of extortion TASMAC Employees Association

இந்த கடைகளில் ரூ.140-க்கு விற்கப்படும் 'குவார்ட்டர்' பாட்டில்தான் குறைந்த விலையிலான மது பாட்டிலாகும். இந்த ரூ.140-ல், ரூ.128.50 மாநில அரசுக்கு வரியாக போய்விடுகிறது. ரூ.10.50 மட்டுமே மதுபான ஆலைகளுக்கு விற்பனை விலையாக செல்கிறது. ரூ.1.50 மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு கிடைக்கிறது. அந்தவகையில், தமிழக அரசுக்கு வரியாக மட்டும் கடந்த நிதி ஆண்டில் ரூ.48,344 கோடி கிடைத்திருக்கிறது. இந்த சூழலில் டாஸ்மாக் கடைகளில் 'குவார்ட்டர்' பாட்டிலுக்கு அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதலாக ரூ.10-ம், 'ஆப்' பாட்டிலுக்கு ரூ.20-ம், 'புல்' பாட்டிலுக்கு ரூ.40-ம் வாங்கப்படுவது தொடர்கதையாகிறது. ஆனால் ஆட்சி மாறினாலும், இன்னும் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பது நின்றபாடில்லை.

இதனிடையே டாஸ்மாக் பணியாளர் சங்க பொதுச்செயலாளர் தனசேகரன் கூறுகையில், "டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் குவார்ட்டர் பாட்டில்களுக்கு வாங்கப்படும் 10 ரூபாய் டாஸ்மாக் கடைகளில் தங்களுக்கு கூடுதலாக ஆகும் செலவுகளை ஈடுகட்டவே டாஸ்மாக் ஊழியர்களால் வாங்கப்படுகிறது. முதன் முதல் செலவாக கிடங்கில் இருந்து மது பாட்டில்கள் லோடு ஏற்றிக்கொண்டு கடைகளுக்கு வருகிறது. அந்த லோடு ஏற்றும் பணியாளர்களுக்கு அந்த கடையில் இருந்து பெட்டி ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை கூலியாக வழங்கப்படுகிறது.

அடுத்து மது பாட்டில் இறக்கும்போது பாட்டில்கள் தவறி விழுந்து சேதமடைந்தால் அதற்கான செலவு டாஸ்மாக் பணியாளர்களிடம் தான் சுமத்தப்படுவது வழக்கமாக உள்ளது. மூன்றாவது செலவு கடைக்கான வாடகை, மின்சார கட்டணம் ஆகியவற்றை டாஸ்மாக் பணியாளர்கள் தான் வழங்க வேண்டியது உள்ளது.

இது எல்லாவற்றையும் விட பல்வேறு மட்டங்களில் மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை மாதா மாதம் மாமூல் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் ஒரு மகிழ்ச்சியான விஷயம். இதுவரை கொடுக்கப்பட்டு வந்த மாமூல் தொகையை கேட்டு இந்த மாதம் யாரும் வரவில்லை. பணியாளர்கள் சென்று கொடுத்தாலும் வேண்டாம் என்று மறுக்கிறார்கள். இது வரவேற்கக்கூடியது. இது தமிழக வரலாற்றில் நடக்காத ஒன்று

மாமூல் தொல்லையில் இருந்து எங்களை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு காப்பாற்றி விட்டது. இதேநிலை தொடர்ந்து நீடித்தால் மகிழ்ச்சிதான். இதுபோல கூடுதலாக டாஸ்மாக் பணியாளர்கள் கொடுத்து கொண்டு இருக்க வேண்டிய தொகையையும், டாஸ்மாக் நிறுவனமே வழங்கி விட்டால் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கும் நிலையே வராது. கேரளாவை போல் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வும் வழங்கவேண்டும்" இவ்வாறு டாஸ்மாக் பணியாளர் சங்க பொதுச்செயலாளர் தனசேகரன் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+