மகளுடன் எந்த சண்டையும் இல்லை.. இறப்பதற்கு முன் என்னுடன்தான் பேசினார்.. சித்ராவின் தாயார் விஜயா
சென்னை: எனது மகளுடன் நான் சண்டை போடவில்லை என நடிகை சித்ராவின் தாயார் விஜயா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சின்னத்திரை நடிகை சித்ரா நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் இவருக்கும் ஹேம்நாத்திற்கும் கடந்த அக்டோபரில் பதிவு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
Recommended Video

இதனால் சித்ராவின் மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சித்ராவுக்கு அவரது தாயும் கணவரும் கொடுத்த மன அழுத்தமே அவரை தற்கொலை செய்ய தூண்டியதாக தெரிவித்தனர்.

ஆர்டிஓ
இதன் அடிப்படையில் இன்றைய தினம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு சித்ராவின் தாய் விஜயா விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சித்ராவுக்கும் தாய்க்கும் இடையே நடந்த பிரச்சினை என்ன, அவர் இறப்பதற்கு முன் ஏதேனும் தெரிவித்தாரா உள்ளிட்ட கேள்விகளை ஆர்டிஓ கேட்டிருக்கலாம் என தெரிகிறது.

போனில் பேச்சு
இந்த நிலையில் இந்த விசாரணைக்கு பிறகு, வெளியே வந்த விஜயா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் எனக்கும் எனது மகளுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. நான் அவருடன் சண்டையிடவில்லை. எனது மகள் இறப்பதற்கு முன்னர் என்னிடம் போனில் பேசினார் என்றார் விஜயா.

ஹேம்நாத்
அதாவது சித்ராவின் கணவர் ஹேம்நாத்திற்கு ஏகப்பட்ட கடன்கள் இருந்ததாகவும் இதற்காக சித்ராவிடம் அவ்வப்போது காசு வாங்கியதால் சித்ராவால் திருவான்மியூரில் வாங்கிய வீட்டுக்கு மாத தவணையை வங்கிக்கு செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஹேம்நாத்தை நீ ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?

வாக்குவாதம்
அவரை விட்டுவிட்டு நம் வீட்டுக்கே வந்துவிடு என சித்ராவின் தாயார் விஜயா அவ்வப்போது மகளுடன் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஹேம்நாத்திற்கு சித்ரா நடிப்பது பிடிக்கவில்லை என்றும் மாப்பிள்ளைக்கு பிடித்தபடி நடிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என சித்ராவின் தாயாரும் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. எனினும் விசாரணையில்தான் சித்ராவின் தற்கொலைக்கு என்ன காரணம்,யார் காரணம் என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications