காஷ்மீரில் இறந்த தமிழக ராணுவ வீரர் சரவணன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்: முதல்வர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காஷ்மீரில் இறந்த தமிழக ராணுவ வீரர் சரவணன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கபபடும் என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மதுரை கரிசல்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் சரவணன் காஷ்மீரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தார். பணியில் ஈடுபட்டபோது குளிரிலிருந்து தப்பிக்க நண்பர்கள் 3 பேருடன் சிலிண்டரிலிருந்து நெருப்பை ஏற்படுத்த முயன்றபோது, வெடித்து உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பாதுகாப்பு பணியின்போது உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் சரவணனின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும், உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் சரவணனின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications