Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் ‘செம மாஸ்’ திட்டம்.. 3 ஃப்ளோர்.. முதல் முறையாக கோ- ஒர்க்கிங் ஸ்பேஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ், படிப்பதற்கான நூலகம் உள்ளிட்டவை இடம்பெற்ற முதல்வர் படைப்பகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். ரூபாய் 2.85 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் கட்டப்பட்டுள்ளது.முதல் முறையாக இந்த திட்டம் முதல்வரின் தொகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம், ஜெகந்நாதன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பன்னோக்கு மையத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் முதல்வரின் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியை கொண்டு "முதல்வர் படைப்பகம்" என்ற பெயரில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் அமைக்கப்பட்டுள்ளது. 2.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இது அமைக்கப்பட்டுள்ளது.

mk stalin kolathur

இந்த படைப்பகத்தில் வருகின்றவர்களுக்கு படிப்பதற்கென்று ஒரு தளமும், பணியாற்றுவதற்கு என்று ஒரு தளமும், உணவு அருந்துவதற்கு ஒரு தளமும் என 3 தளங்கள் உள்ளன. ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கும் அளவுக்கு இடவசதி உள்ளது. அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை கொண்ட ஒரு நூலகமும் அமைக்கப்பட உள்ளது.

இதற்கு ரூ.5 மற்றும் ரூ.10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலவசமாக அனுமதிக்கப்பட்டால் பொழுதுபோக்கு கூடமாக மாறிவிடக்கூடும் என்பதற்காக இந்த குறைந்தபட்ச கட்டணம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோ-ஒர்க்கிங் ஸ்பேஸ்: பணி செய்வதற்காக கோ- ஒர்க்கிங் ஸ்டேஷன் எனப்படும் ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 38 நபர்கள் ஒரே நேரத்தில் பணியாற்றலாம். மேலும், இதில் 3 கலந்தாய்வு கூடங்கள் அமைக்கப்படுகின்றன.

கலந்தாய்வு கூடங்களில் இரண்டில் தலா 4 பேரும், ஒன்றில் 6 பேரும் அமர்ந்து பணியாற்ற முடியும். இந்த முதல் கோ- ஒர்க்கிங் ஸ்பேஸ் எனப்படும் 'முதல்வர் படைப்பகம்' கட்டிடத்தை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

கோ ஒர்க்கிங் ஸ்பேஸ் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்படாது என்றும், பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் இருக்கும் நிறுவனங்களுக்கு இந்த பணியிடத்தை பகிரவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கும் குறைந்த அளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

மேலும், பெண்கள் கணினி கற்பதற்காக, அனிதா பெயரில் கொளத்தூரில் தொடங்கப்பட்ட மையத்தில், 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பலனடைந்துள்ளனர். இதன், 13-வது பேட்ச்சாக பயிற்சி முடித்தவர்களுக்கு கணினி வழங்கி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.105 பேருக்கு கணினியும், 360 பேருக்கு தையல் இயந்திரமும் வழங்கி உள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+