பத்திரிகையாளர்களுக்கு சம்மன்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜனுக்கு அசாம் போலீஸ் சம்மன் வழங்கியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

"இருவர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்த சில நாட்களில் சம்மன் அனுப்பியுள்ளனர். FIR நகல் எதுவும் இல்லாமல் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் இருவரும் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது. பத்திரிகை சுதந்திரத்தை முடக்க தேசத்துரோக சட்டம் பயன்படுத்தப்படுகிறது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது x பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

MK Stalin Tamil nadu

"பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜன் ஆகியோருக்கு அசாம் காவல்துறை சம்மன் அனுப்பியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு, இது தொடர்புடைய வழக்கில் பாதுகாப்பு வழங்கிய போதிலும் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் வழக்கின் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை, இதனால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சுறுத்தல் மட்டுமே உள்ளது.

சுதந்திரமான பத்திரிகைத் துறையை ஒடுக்குவதற்காக, ரத்து செய்யப்பட்ட தேசத்துரோக சட்டத்திற்குப் பதிலாக, இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டம் (BNS) பிரிவு 152 தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+