முதுகுவலி.. முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு மருத்துவமனையில் பரிசோதனை.. இன்றே வீடு திரும்புவார்
சென்னை: முதுகு வலி காரணமாக தமிழ்நாட்டு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் சென்னை தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை இன்று செய்து கொண்டார். இதையடுத்து அவர் இன்றே வீடு திரும்புகிறார்.
தமிழ்நாட்டு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் இன்று மாலை 7.10 மணிக்கு சென்னை போரூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு ஏன் வந்தார்? என்பது பற்றி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது.
அதில் முதுகு வலி தொடர்பான வழக்கமான மருத்துவ பரிசோதனை முதல்வர் ஸ்டாலினுக்கு மேற்கொள்ளப்பட்டது என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்ப உள்ளார்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த பரிசோதனையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மருத்துவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு சில அறிவுரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications