“தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே எங்கள் உறுதியான கொள்கை”.. அடித்துச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்
சென்னை: பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உரையாற்றினார். அப்போது இருமொழிக் கொள்கையே எங்கள் உறுதியான கொள்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கான மாநிலக் கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிட்டார். இந்தக் கொள்கை உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கை கொள்கை இன்று வெளியிடப்பட்டது.

மாநில கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களில், 3, 5, மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படக் கூடாது எனவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், 11 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழை முதல் மொழியாகவும், கற்பிக்கும் மொழியாகவும் நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை உருவாக்க, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022இல் அமைக்கப்பட்டு, 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 2024 ஜூலை மாதம் முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில பள்ளிக் கல்விக் கொள்கை வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பள்ளிக்கல்வி வரலாற்றில் இது மிகவும் சிறப்புவாய்ந்த விழாவாகும். மாணவர்களை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்கிறேன். அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம். தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக் கொள்கைதான் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது" என்றார்.
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களில் 75 சதவிகிதத்தினர், உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது அடுத்தாண்டில் மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஓராண்டில் மட்டும் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட 93 முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் 50-க்கும் மேற்பட்ட துறைகளில் தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 901 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்.
தமிழகத்துக்கான மாநில கல்விக் கொள்கை தனித்துவமானது; முற்போக்குச் சிந்தனை கொண்டது. எதிர்காலத் தேவைக்கான ஆற்றலை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த கல்விக் கொள்கையில் தாய்மொழியான தமிழ், பிரதானமான அடையாளமாக இருக்கும்.
படித்து மனப்பாடம் செய்வது போன்று அல்லாமல், சிந்தித்து கேள்வி கேட்கக்கூடிய அளவுக்கு கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. படித்த மாணவர்களாக மட்டுமல்லாமல், படைப்பாளர்களாகவும் அவர்களை உருவாக்கும். அறிவியலுக்கு புறம்பான சிந்தனைகள் இதில் இல்லை. இந்தக் கல்விக் கொள்கை மூலம் கல்வியில் உலகளாவிய போட்டிகளை நமது மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
-
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்!












Click it and Unblock the Notifications