எந்த லெவலில் சி.எம்.டி.ஏ.பணிகள்? அதிகாரிகளிடம் கேள்விக்கணைகளை வீசிய அமைச்சர் சேகர்பாபு!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதது குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.
இந்தக் ஆலோசனைக் கூட்டத்தின் போது கேள்விக்கணைகளை அதிகாரிகளிடம் வீசினார் அமைச்சர் சேகர்பாபு.
இது தொடர்பான விவரம் வருமாறு;

சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை மாநகரின் அசுர வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில் இன்று சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் சேகர்பாபு தலைமையில், கடந்த 2021-2022 மற்றும் 2022-2023 சட்டமன்ற கூட்டத்தொடர் அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், 2023-2024 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் தொடர்பாகவும், கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் மூன்றாவது முழுமைத் திட்டம் - தொலைநோக்கு, நில சேர்மம், தள பரப்புக் குறியீடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், நீதிமன்ற வழக்குகள் நிலவரம், வரன்முறை திட்டம் மற்றும் கோயம்பேடு மொத்த விற்பனை வளாகம் குறித்தும் அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடைபெற்றது.












Click it and Unblock the Notifications