விஜய் அடித்து ஆடுகிறார்.. கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை? மோடி கிரீன் சிக்னல்? பணிகள் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் தொழில் நகரமான கோவையில் மிக விரைவில் புதிய எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை அமைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. கோவையில் இந்த அதிநவீன மருத்துவமனையை அமைப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகளைத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

AIIMS Coimbatore

மத்திய அரசிடமிருந்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற நம்பிக்கையில், மருத்துவமனைக்குத் தேவையான நிலத்தைத் தேர்வு செய்யும் பணிகளைத் தமிழக அரசு தற்போதே முடுக்கிவிட்டுள்ளது.

முதல்வர் விஜய்யின் கோரிக்கை:

இது தொடர்பாக அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த முக்கிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறுகையில், "தமிழக முதல்வர் விஜய் அவர்கள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து, தமிழகத்தின் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனையைக் கோவையில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். கொங்கு மண்டல மக்களின் நீண்ட நாள் தேவையாகவும், ஒட்டுமொத்த மேற்கு தமிழகத்தின் மருத்துவத் தேவையை நிவர்த்தி செய்யும் வகையிலும் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

நிலம் தேர்வு செய்யும் பணி தீவிரம்:

மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் வரும் என்று தமிழக அரசு மிகவும் நம்பிக்கையுடன் உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் அருண்ராஜ், அதற்கு முன்னதாகவே கோவைப் பகுதியில் மருத்துவமனைக்குத் தகுந்த இடங்களைத் தேடும் பணி (Site Selection) தொடங்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். கோவை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, தகுந்த போக்குவரத்து வசதிகள் மற்றும் பரந்த நிலப்பரப்பு கொண்ட இடங்கள் இதற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தின் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனையாக இது அமையும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மத்திய அரசிடமிருந்து மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொங்கு மண்டலத்திற்கு என்ன பயன்?

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால், கோவை மட்டுமன்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். ஏழை எளிய மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த உயர்தர மருத்துவச் சிகிச்சை இலவசமாகவும், மிகக் குறைந்த செலவிலும் கிடைக்க வழிவகை ஏற்படும். மேலும், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளும் இப்பகுதியில் புதிய வேகமெடுக்கும்.

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், நிலம் ஒப்படைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் துரிதமாகத் தொடங்கப்படும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் விஜய்யின் இந்த முயற்சியால் கோவை மக்களுக்கு ஒரு மிகப்பெரிய மருத்துவ வரப்பிரசாதம் கிடைக்கப் போகிறது என்பதால் கொங்கு பகுதி மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+