சென்னையை போல, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம்..பட்ஜெட்டில் ரூ.17,500 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னையை போல மதுரை, கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் இதற்காக 17,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: மதுரையின் மையப்பகுதியில் நிலத்துக்கடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் பல வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் இன்றி பலரும் பயணம் செய்து வருகின்றனர்.சென்னையைப் போல கோவை, மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 2023-24 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி கோடம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் 2025ஆம் ஆண்டில் நிறைவுபெறும். மதுரையின் மையப்பகுதியில் நிலத்துக்கடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
கோவையில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அவினாசி சாலை, சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கிய பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகரம் தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.8500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரை திருமங்கலத்தையும், ஒத்தக்கடையும் இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications