தபால் நிலையங்களில் இருந்து வீடு தேடி வருது.. புதிய வாக்காளர்களே சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: தமிழகத்தில் புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்ட சுமார் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டையை தபால் மூலம் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 18 லட்சம் பேர் வாக்குகள் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் அனேகமாக ஏப்ரல் இறுதியில் அல்லது மே தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஒரே கட்டமாக இல்லாமல் சில மாநிலங்களில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரை ஒரே நாளில் தான் நடைபெறும். 2004 முதல் 2006 வரை பிறந்தவர்கள் இந்த முறை வாக்களிக்க உள்ளாவர்கள். அதாவது 2000க்கு பிறகு பிறந்த வாக்காளார்கள் அதிக அளவில் வாக்களிக்க போகிறார்கள்.

கிட்டத்தட்ட 25 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தமிழகத்திலும், நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாக்காளர்களும் வாக்களிக்க போகிறார்கள். 2004 முதல் 2006 வரை பிறந்தவர்கள் வாக்களிக்க வேண்டும் என்றால் வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு இறுயில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர்களாக இணைப்பதற்கான வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகள் நடந்தது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி, தொகுதி மாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டதுடன் ஜனவரி 22ம் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் தமிழ்நாடு முழுவதும் வெளியானது. ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய வாக்காளர்களாக ஆயிரக்கணக்கானோர் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டையை தபாலில் அனுப்பும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் சேர்க்கவும் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் பட்சத்தில், வேட்பாளர்கள் இறுதி வேட்புமனுத் தாக்கலுக்கு 10 நாட்கள் முன்பு வரை பெயர் சேர்க்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். இப்போது விண்ணப்பித்தால் கூட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்க்க முடியும். ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications