ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகம் குறைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கூடுதலாக 20% வணிக சிலிண்டர்களை ஒதுக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி மறுத்து உள்ளது. இதனால் வணிக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளது.

ஈரான்- இஸ்ரேல் போரால் சென்னை உட்பட இந்தியா முழுவதும் வணிக சிலிண்டர் விநியோகம் சீரற்ற முறையில் இருப்பதால், வழக்கமாக வரும் சிலிண்டர்கள் வராமல் ஓட்டல் உரிமையாளர்கள் திணறி வருகின்றனர். அடுத்த 2 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பில் சிலிண்டர் உள்ளது எனப் பல ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கேஸ் தட்டுப்பாடு நீடித்தால், ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், இது பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல ஹோட்டல்கள் உணவுகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டன.
இதற்கிடையே இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் எரிவாயு ஏற்றி வந்த கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்தது. இதனையடுத்து 4 கப்பல்கள் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தன. இந்தநிலையில், எரிவாயு நிரப்பட்ட மேலும் 2 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு புறப்பட தயாராகி வருகின்றன.
பைன் கேஸ் மற்றும் ஜக் வசந்த் ஆகிய திரவ பெட்ரோலிய எரிவாயும் நிரப்பப்பட்ட 2 இந்திய கப்பல்கள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜா அருகே நிறுத்தப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்கள் இந்தியாவுக்கு புறப்படுவதற்கான சிக்னல்கள் வந்துள்ளதாக கப்பல் கண்காணிப்பு தரவு மையம் தெரிவித்து உள்ளது. அக்கப்பல்கள் இன்று புறப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், மத்திய கிழக்கு பிராந்திய போரால் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய வணிக சிலிண்டர்களின் அளவு 30 சதவீதம் ஆக குறைக்கப்பட்ட நிலையில், வரும் மார்ச் 23 முதல் 50 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த ஒதுக்கீடு ஹோட்டல்கள், அரசு சமையல் கூடங்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலர் நீரஜ் மிட்டல், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், குழாய் வழி எரிவாயு திட்டத்தை எளிதாக்க மாநிலங்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் 20 விழுக்காடு கூடுதல் வணிக சிலிண்டர்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கூடுதல் வணிக சிலிண்டர்களை ரெஸ்டாரன்டுகள், தாபாக்கள் மற்றும் உணவகங்கள், தொழில்துறை சார்ந்த உணவகங்கள், மாநில அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் மானிய விலை உணவகங்களுக்கு விநியோகிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோர் அனைவரும் எண்ணெய் நிறுவனங்களிடம் பதிவு செய்திருக்க வேண்டும். வரும் காலத்தில் குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பிற்கு மாறுவதற்குத் தயாராக உள்ளவர்கள் மற்றும் அதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே இந்த 50% ஒதுக்கீட்டின் கீழ் எரிவாயு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஈரானின் கதை முடிந்தது... 3 வார போரை முடிக்கப்போகிறோம்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
18 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. இடி,மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
பெரிய கேஸ் கிடங்கை காலி செய்த ஈரான்.. . Persona Non Grata-வை அறிவித்த கத்தார்.. அப்படினா என்ன? -
ஈரான் கொடூர ‘அட்டாக்’.. உலகிலேயே மிகப்பெரிய கத்தார் எல்என்ஜி கேஸ் ஆலையில் ஏவுகணை தாக்குதல் -
உலகை உலுக்கும் ஈரான் போர்.. எரிசக்தி விநியோகக் கட்டமைப்பு மொத்தமா காலி! பற்ற வைத்த அமெரிக்கா! -
Saudi Arabia: பொறுமைக்கும் எல்லை இருக்கு.. ஈரானை பகிரங்கமாக எச்சரித்த சவுதி! திருப்பியடிக்க முடிவு? -
ஹார்முஸுக்கு பிறகு ஒரே நம்பிக்கை "யான்பு".. அதையும் விடாமல் தாக்கும் ஈரான்! கொந்தளிக்கும் சவுதி -
வினாடிக்கு ரூ.21.36 லட்சம் காலி.. ஈரான் போரில் அமெரிக்காவின் செலவு என்ன? வாய்ப்பிளக்க வைக்கும் நம்பர்












Click it and Unblock the Notifications