Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதலில் ஒப்புதல் அளித்துவிட்டு அவையில் வந்து நாடகம் ஆடுகிறார் ஆளுநர் ரவி.. காங்கிரஸ் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவில்லை என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். ஆளுநர் சட்டப்பேரவைக்கு வராமலேயே இருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த வருடத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்த பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னர் ஆளுநர் ரவி பேரவையிலிருந்து வெளியேறினார். இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்துகொண்ட விதத்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

Congress MLA Selvaperunthagai says that the Governor may not have come to Assembly

ஆளுநரின் செயல்பாடு குறித்து காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஆளுநர் அவைக்கு வந்த உடன் தமிழிலேயே பேச முயற்சி செய்தார். அவருக்கு தமிழ் சரியாக வரவில்லை. பிரதமர் மோடி எப்படி திருக்குறளை படிக்கிறாரோ அதேபோல தவறான உச்சரிப்புடன் தமிழில் பேசினார். பின்னர் தேசிய கீதம் இசைக்கவில்லை என்பதை மிகப் பெரிய குறையாக சொன்னார்.

தமிழக சட்டப்பேரவையில் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுதான் இன்றும் பின்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் மரபு எப்போதுமே முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, முடிவில் தேசிய கீதம். இதைக் கூட புரிந்து கொள்ளாதவராக ஆளுநர் இருக்கிறார். ஆளுநர் மரபுகளை மீறியபோதும் ஜனநாயகப்படி செயல்பட வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்.

ஆளுநரை தமிழக அரசு மாண்போடு நடத்துகிறது. மரியாதையை ஆளுநர் காப்பாற்றிக் கொள்ளவில்லை. அவர் தொடர்ந்து ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறார். 2 நிமிடங்கள் காத்திருந்து தேசிய கீதம் பாடிய பிறகு ஆளுநர் சென்றிருக்கலாம். மத்திய அரசுக்கு எதிரான மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம் குறிவைத்து அவமரியாதை செய்கின்றனர்.

தமிழ்நாடு அரசு தயாரித்த உரைக்கு ஆளுநர் தான் ஒப்புதல் அளித்துள்ளார். ஒப்புதல் பெறப்போகும்போதே இது எனக்கு பிடிக்கவில்லை, இதை நான் படிக்க மாட்டேன் என்று கூறி இருக்கலாம். ஆனால் உரைக்கு முதலில் ஒப்புதல் தந்த பிறகு சட்டப்பேரவையில் வாசிக்க மாட்டேன் என்று ஆளுநர் நாடகம் ஆடியுள்ளார். ஆளுநர் ரவியின் இந்தச் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆளுநர் சட்டப்பேரவைக்கு வராமலேயே இருந்திருக்கலாம். சட்டப் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் விரோதமானது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஷமத்தனம் செய்து சட்டமன்ற மாண்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி சிதைத்துள்ளார்" என்று விமர்சித்துள்ளார் செல்வப்பெருந்தகை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+