நாங்க நீட் தேர்வை எதிர்க்க இது தான் காரணம்... இந்த புள்ளிவிவரத்தை நீங்களும் பாருங்க -ஜோதிமணி எம்.பி
சென்னை: நீட் தேர்வால் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து அரசுப் பள்ளியில் பயின்று மருத்துவராக வேண்டும் என கனவு காணும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏ.கே.ராஜன் வெளியிட்டுள்ள புள்ளியியல் விவரத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு;
2010-2011-ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 80.2 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 19.79 சதவீதமும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
2011- 2012-ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 81.95 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 18.05 சதவீதமும் மாணவர் சேர்க்கை நடந்தது.
2012 -2013 காலகட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 81.42 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 18.58 சதவீதமும் மாணவர் சேர்க்கை இருந்தது.
2013-2014-ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 82.55 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 17.45 சதவீதமும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
2014-2015 -ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 80.87 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 19.12 சதவீதமும் மாணவர் சேர்க்கை இருந்திருக்கிறது.
2015 -2016-ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 83.05 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 16.94 சதவீதமும் மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது.
2016-2017 -ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 85.12 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 14.88 சதவீதமும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
2017 -2018-ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 98.41 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 1.06 சதவீதம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
2018-2019-ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 96.73 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 3.27 சதவீதம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
2019-2020-ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 98.31 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 1.69 சதவீதம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
2020-2021-ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 98.01 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 1.99 சதவீதம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
இந்த புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டு பார்க்க வேண்டும் என்பது என்னவென்றால், கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு அதாவது ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழ் வழிக்கல்வி கற்ற கிராமப்புற மாணவர்கள் எத்தனை சதவீதம் பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார்கள் என்பதை தான். 2017-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 20% தமிழ் வழிக்கல்வி கற்ற கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து வந்தனர்.
நீட் தேர்வு தமிழகத்திற்கு வந்தது முதல் இந்த எண்ணிக்கை மிகப்பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த நான்காண்டுகளையும் மொத்தமாக சேர்த்தால் கூட தமிழகத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே தமிழ் வழிக்கற்ற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications