72 குண்டுகள் முழங்க.. குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் சென்னையில் தகனம்.. தலைவர்கள் அஞ்சலி
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள மகள் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
இங்கு அரசியல் தலைவர்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனையடுத்து அவரது உடலுக்கு மாலை 5 மணிக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

காமராஜரின் தீவிர தொண்டராக குமரி அனந்தன் அறியப்பட்டார். குறிப்பாக தமிழ் மொழிக்காக அவர் எடுத்த முன்னெடுப்புகள் இன்றுவரை நினைவுக்கூறப்படுவதாக இருக்கிறது. ஒரே ஒரு முறைதான் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அந்த 5 ஆண்டு காலத்தில் அவர் தமிழுக்காக ஆற்றிய பங்களிப்புகள் இன்றுவரை தமிழர்களை தலை நிமிர செய்திருக்கிறது என்று அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமைக்காக தீவிரமாக இவர் போராடியுள்ளார். அதற்கான உரிமையை பெற்று தந்திருக்கிறார். அதனால்தான் இன்றும் தமிழக எம்பிக்கள் தமிழில் கேள்வி எழுப்பி பதிலை பெற முடிகிறது. விமானங்களில் தமிழில் அறிவிப்புகள், தபால் நிலையங்களில் தமிழில் படிவங்கள் கிடைக்க வேண்டும் என தமிழ் மொழியின் பரவலான அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராடி அதில் வெற்றிக்கண்டவர்தான் குமரி ஆனந்தன்.
வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்சனையால் போராடி வந்த குமரி அனந்தன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.15 மணியளவில் அவர உயிரிழந்ததாக அறிப்பு வெளியாகியுள்ளது.
குமரி அனந்தனின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று அரசியல் தலைவர்கள் குமரி அனந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு மாலை 5 மணியளிவில் சென்னை வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. போலீசாரின் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications