Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் கேஎன் நேருவிற்கு எதிராக எப்ஐஆர் போடப்படுமா? தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சொன்ன பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் வேலைக்கு லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு உள்ளது. இந்த மோசடி தொடர்பாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 20ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் ஆலோசித்து வருவதாகத் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த 2024-25 ஆம் ஆண்டுகளில், தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட 2 ஆயிரத்து 538 பணியிடங்களை நிரப்புவதில் ஒவ்வொரு பதவிக்கும் நிரப்ப 10 ரூபாய் நோட்டு மூலம் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. டெண்டர் மற்றும் ஒப்பந்தங்களில் 7.5% முதல் 10% வரை லஞ்சம் பெறப்பட்டதாகவும், மொத்தம் ரூ.1,020 கோடி வரை ஊழல் நடந்திருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

contempt of court case against dvac Will an FIR be filed against Minister KN Nehru

இதுதொடர்பாக 232 பக்க ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை தமிழக டி.ஜி.பி. மற்றும் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தது. அதில் கேஎன்நேரு உள்ளிட்ட சம்பந்தபட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கோரியிருந்தது. ஆனால், தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அ.தி.மு.க எம்.பி. இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் ஆதிநாராயணன் ஆகியோர் தனித்தனியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நிதியுதவி அளித்த பொற்கொடிக்கு ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம்
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நிதியுதவி அளித்த பொற்கொடிக்கு ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம்

இந்த மனுக்களை சென்டின உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு விசாரித்தது. கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி அன்று அளித்த தீர்ப்பில், "அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியது.

ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை உடனடியாகப் பின்பற்றாததற்காக, லஞ்ச ஒழிப்புத் துறையின் அப்போதைய பொறுப்பு இயக்குநர் ஏ.டி. துரைக்குமாருக்கு எதிராக அதிமுக ராஜ்யசபா எம்பி இன்பத்துரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இன்பதுரை தனது மனுவில், எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்படுவதற்கு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராகப் பதவி வகித்த துரைக்குமார், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறியதாக தனது பிரமாணப் பத்திரத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மோசடி மிகவும் தீவிரமான தன்மை கொண்டது என்றும், உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் என 2,538 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களிடம் இருந்து ரூ. 25 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை லஞ்சமாகப் பெறப்பட்டதாக இன்பத்துரை மனுவில் கூறியிருந்தார்.

நீலகிரி அரசு ஊழியரை மயக்கிய இளம் பெண்.. ஒரே நாளில் 20 லட்சம் சம்பாத்தியம்.. ட்விஸ்ட்
நீலகிரி அரசு ஊழியரை மயக்கிய இளம் பெண்.. ஒரே நாளில் 20 லட்சம் சம்பாத்தியம்.. ட்விஸ்ட்

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி தனது வாதத்தைத் தொடங்குகையில், எப்.ஐ.ஆர் உடனடியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு 10 நாட்களுக்கு மேலாகியும், லஞ்ச ஒழிப்புத் துறை இதுவரை வழக்கைப் பதிவு செய்யவில்லை என்று கூறினார்.

அப்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச், நீதிமன்றத்தில் இருந்த அரசு தலைமை வழக்கறிஞரிடம் மாநில அரசின் பதில் என்ன என்று தலைமை நீதிபதி கேட்டபோது, பொதுவாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராவதில்லை என்று பி.எஸ். ராமன் கூறினார.

மேலும் அவர் கூறுகையில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராவார் என்றும் கூறினார். இருப்பினும், நீதிமன்றம் கேட்டுக் கொண்டதால், லஞ்ச ஒழிப்புத் துறை ஒரு மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், எப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பாக, 1988-ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A-ன் கீழ் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டுமா என்பது குறித்து அந்த முகமை தன்னிடம் சட்ட ஆலோசனை கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இருதரப்பு ஆரம்பகட்ட வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு மனு குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+