Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐ-க்யூ குறைவா? நான் State Boardல் படித்தவன்! விவாதமான ஸ்டேன்ட்அப் காமெடியனுக்கு மதுரை எஸ்பி பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டேட் போர்டில் படித்தால் ஐ-க்யூ குறைவாக இருக்கும் எனும் பொருள்படும் படி பேசி விவாதத்துக்கு உள்ளான ஸ்டேன்ட் அப் காமெடியன் அபிஷேக் குமாருக்கு மதுரை எஸ்பி வருண் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

தற்போது ‛ஸ்டேன்ட் அப்' காமெடி நிகழ்ச்சிகள் அதிகரித்துள்ளன. அபிஷேக் குமார் என்பவரும் ஸ்டேன்ட் அப் காமெடி செய்து வருகிறார். இவர் தான் செய்யும் ‛ஸ்டேன்ட் அப்' காமெடி தொடர்பான வீடியோக்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இவரை இன்ஸ்டகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ஏராளமானவர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது அபிஷேக் குமார் பதிவேற்றிய வீடியோ விவாதப்பொருளாகி உள்ளது.

Renault கம்பெனி விவாதம்

Renault கம்பெனி விவாதம்


அந்த வீடியோவில் அபிஷேக் குமார், கூட்டத்தில் இருக்கும் பெண் ஒருவரை நோக்கி எங்கு பணி செய்கிறீர்கள்? என கேள்வி கேட்கிறார். அதற்கு அந்த பெண், ‛‛ஐடியில் வேலை செய்கிறேன்'' என்கிறார். இந்த வேளையில் அவர்கள் இடையேயான உரையாடல் என்பது அந்த பெண் பணியாற்றிய முந்தைய நிறுவனமான‛‛Renault''கம்பெனி தொடர்பாக மாறுகிறது.

ஆங்கில உச்சரிப்பால் குழப்பம்

ஆங்கில உச்சரிப்பால் குழப்பம்

அப்போது Renault என்பதை ஆங்கில உச்சரிப்பின்படி ரெனோ (reh·noh) எனக்கூற வேண்டும். இதனால் அந்த பெண், ரெனோ (reh·noh) எனக்கூறினார். இது புரியாத நிலையில் அபிஷேக் குமார், ‛பரீட்சயமான வார்த்தையாக உள்ளது'' என்று மட்டுமே கூறுகிறார். இந்த வேளையில் Renault நிறுவனத்தை எளிதாக குறிப்பிடும் வகையில் அந்த பெண் ‛கார்' எனக்கூறினார். அப்போது அபிஷேக் குமார் Renault (ரெனோ) என்பதை Renault-tu(ரெனால்டு) என்று உச்சரித்தால் எளிதாக புரியும் என்று தெரிவித்தார்.

ஐ-க்யூ குறைவாக...

ஐ-க்யூ குறைவாக...

மேலும் இந்த தடுமாற்றம் குறித்து அபிஷேக் குமார், தான் ஸ்டேட் போர்ட்டில் படித்ததாகவும், அறிவுத்திறன் (ஐ-க்யூ) குறைவாகவும், ஊமையாக இருந்தது என பொருள்படும்படி கூறினார். அதற்கு அந்த பெண், நானும் அப்படியே என கூறுகிறார். இதையடுத்து அபிஷேக் குமார், ‛‛ஆனால் நீங்கள் அந்த நிறுவனத்தில் நுழைந்த பிறகு ​​​​உங்கள் உச்சரிப்பு மாறும்விட்டது சரியா'' என கூற அனைவரும் சிரிக்கின்றனர். அதாவது அந்த பெண்ணும் முதலில் ரொனால்டு எனக்கூறிய நிலையில் தான் ரெனோ என நிறுவனத்தின் பெயரை உச்சரிக்க தொடங்கியதை அபிஷேக் குமார் கூறினார்.

விவாதமான வீடியோ

விவாதமான வீடியோ

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. அதாவது அபிஷேக் குமார் ஸ்டேட் போர்ட்டில் படித்தவர்களுக்கு அறிவுத்திறன் குறைவாக உள்ளதாக தெரிவித்ததாக கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் மதுரை எஸ்பியான வருண் குமார் இந்த விவாதத்தில் இணைந்துள்ளார்.

 எஸ்பி எழுப்பிய கேள்வி

எஸ்பி எழுப்பிய கேள்வி

பல் மருத்துவம் படித்து ஐபிஎஸ் ஆன வருண் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அபிஷேக் குமாரை டேக் செய்து, "நான் ஸ்டேட் போர்டில் படித்தேன். நான் CSE 2010ல் அகில இந்திய தரவரிசையில் 3ம் இடம் பெற்றேன். இது அறிவுத்திறன் குறைவானதாக இருக்குமா?'' என கேள்வி எழுப்பி உள்ளது. இவரது இந்த பதிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டேட் போர்டில் படித்தவர்களுக்கு யாரும் அறிவுத்திறன் குறைந்தவர்கள் இல்லை என்பதை எடுத்துக்கூறும் வகையில் இந்த ட்விட்டை வருண் குமார் ஐபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பின் செய்து முதல் ட்விட்டாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 அபிஷேக் குமார் விளக்கம்

அபிஷேக் குமார் விளக்கம்


இருப்பினும் இந்த வீடியோ தொடர்பாக அபிஷேக் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஒருவர், ‛‛ஸ்டேட் போர்ட் வரியை நீக்கி இருக்கலாம். இது வேடிக்கைக்காக தான் நீங்கள் சொன்னீர்கள். இருப்பினும்'' என கூறி இருந்தார். அதற்கு அபிஷேக் குமார், ‛‛இது என்னை பற்றி நானே குறிப்பிட்டது தான். ஒட்டுமொத்த ஸ்டேட் போர்டு மாணவர்கள் பற்றி கூறவில்லை'' என விளக்கம் அளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+