வேகமெடுக்கும் கொரோனா.. ஜூலை 15க்குள் சென்னையில் 1.5 லட்சம் பாதிப்பு.. எம்ஜிஆர் பல்கலை ஆய்வறிக்கை
சென்னை: அக்டோபர் மாதம் கொரோனா வேகமெடுக்கும் என்றும் ஜூலை 15-க்குள் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1.5 லட்சமாக உயரும் என்றும் எம்ஜிஆர் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 31-ஆம் தேதி முதல் நேற்று வரை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 25,872 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பேருந்துகள் இயக்கம் தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெறுகிறது. இதனால் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கும் என தெரிகிறது.

1000த்தை தாண்டியது
இதுகுறித்து எம்ஜிஆர் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் கூறுகையில் அக்டோபர் மாதம் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் பல மடங்கு அதிகரிக்கும். தமிழகத்தில் நாள்தோறும் 500 என்று இருந்த புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு கேஸ்கள் தற்போது மே 31-ஆம் தேதி முதல் நாள்தோறும் 1000- தாண்டிவிட்டது.

கொரோனா
தற்போதைய பாதிப்பின் வேகம் தொடர்ந்து வருவதால் ஜூன் 30-ஆம் தேதி மொத்த கொரோனா பாதிப்பு 1.32 லட்சம் ஆகிவிடும். ஜூலை 15-க்குள் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு
அடுத்து வரும் மாதங்களில் கொரோனா உடனான தமிழக அரசின் போர் தீவிரமடைந்துவிடும் என கணிக்கப்பட்டுள்ளது என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன், ஜூலை மாதத்தில் இந்தியாவில் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.

சமூக பரவல்
இந்த நிலையில் தமிழகத்தில் அக்டோபர் மாதத்திற்குள் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும் சென்னையில் ஜூலை மாதம் 15-க்குள் 1.5 லட்சமாகும் என கூறியுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை மருத்துவ நிபுணர்கள் கூறுவது போல் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications