தமிழகத்தில் ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா.. இதுவரை 1937 பேர் பாதிப்பு.. சென்னையில் மோசமாகும் நிலை!
தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 1937 பேருக்கு மொத்தமாக இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது.
Recommended Video
qதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதே சமயம் குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் வீதம் 56% ஆக உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 24 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இன்று கொரோனா காரணமாக தமிழகத்தில் யாரும் பலியாகவில்லை.

எத்தனை பேருக்கு
தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 1937 பேருக்கு மொத்தமாக இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று 47 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 570 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதன் மூலம் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.

குணமடைந்த நபர்கள்
தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 81 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் ஆக்ட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 809 மட்டுமே ஆகும். தமிழகத்தில் 111 குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மதுரையில் இன்று 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

மதுரை நிலை
இதன் மூலம் மதுரையில் 79 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. விழுப்புரத்தில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் விழுப்புரத்தில் 48 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 7176 சாம்பிள்கள் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 94871 சாம்பிள்கள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

சோதனை
இன்று மட்டும் தமிழகத்தில் 6753 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 86339 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா காரணமாக யாரும் தமிழகத்தில் பலியாகவில்லை. தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக தினமும் ஒருவர் அல்லது இருவர் என்று பலியாகி வந்தனர். ஆனால் இன்று தமிழகத்தில் யாரும் பலியாகவில்லை என்பது நல்ல செய்தியாகும்.












Click it and Unblock the Notifications