அதிர்ச்சி தந்த விழுப்புரம்.. தமிழகத்தில் மொத்தம் 6535 பேருக்கு கொரோனா.. இன்று 526 பேர் பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6535 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த நாட்களாக தினமும் கேஸ்கள் அதிக அளவில் வருகிறது. அதிலும் கடந்த 4 நாட்களாக தினமும் 500+ கேஸ்கள் தமிழகத்தில் வருகிறது.
அதிலும் 3 நாட்களுக்கு முன் தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று கொஞ்சம் குறைந்து 526 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
துபாய் டூ சென்னை.. வந்தே பாரத் மிஷனில் அடுத்தடுத்து இயக்கப்பட்ட 2 விமானங்கள்.. 360 பேர் வந்தாச்சு
சென்னை நிலை
சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக சென்னையில் மட்டும் 3330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க இன்று மொத்தம் 219 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தமாக தமிழகத்தில் 1824 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர்.
பலி எண்ணிக்கை
தமிழகத்தில் மொத்தம் 44 பேர் பலியாகி உள்ளனர். இன்று அரியலூரில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இன்று 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 224 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலூரில் இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 394 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் நிலை
இன்று திண்டுக்கல்லில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் இன்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி பெரம்பலூர்
தஞ்சாவூர், திருச்சி, நீலகிரி மற்றும் பெரம்பலூரில் தலா ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நீலகிரியில் மொத்தம் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூரில் மொத்தம் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலூரில் மொத்தம் 65 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இன்று 35 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நிலை
ராமநாதபுரத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 290 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 82 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரத்தில் அதிகமாக 67 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 293 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.