சீனாவில் இருந்து மட்டும் வரவில்லை.. இந்தியாவில் பரவும் 3 வகையான கொரோனா.. பகீர் தகவல்!
இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் மொத்தம் 3 வகையை சேர்ந்தது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் மொத்தம் 3 வகையை சேர்ந்தது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, சீனா, ஈரானில் பரவும் கொரோனா வகை வைரஸ்கள் இந்தியாவிலும் பரவி வருகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Recommended Video
பொதுவாக இரண்டு வகையான வைரஸ்கள் உலகில் உள்ளது. ஒன்று டிஎன்ஏ வகை வைரஸ்கள், இன்னொன்று ஆர்என்ஏ வகை வைரஸ்கள் உள்ளது. இதில் டிஎன்ஏ வகை வைரஸ்கள் தன்னை உருமாற்றி தகவமைத்துக் கொள்ளாது. அதாவது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் போது டிஎன்ஏ வகை வைரஸ்களில் எந்த விதமான மாற்றமும் இருக்காது.
இதனால் டிஎன்ஏ வகை வைரஸ்களுக்கு எளிதாக மருந்து கண்டுபிடிக்க முடியும். ஆனால் ஆர்என்ஏ வகை வைரஸ்கள் அப்படி கிடையாது. இந்த வைரஸ் ஏ என்ற நபரில் இருந்து பி என்ற நபருக்கு பரவும் போது அதன் ஆர்என்ஏ அமைப்பு மாற்றம் அடைய வாய்ப்புள்ளது. அதாவது அந்த வைரஸ் தன்னை தகவமைத்துக் கொண்டு அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும்.

ஆர்என்ஏ வகை வைரஸ் எப்படி
இதனால்தான் ஆர்என்ஏ வகை வைரஸ்களுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்க கடினமாக உள்ளது. ஆர்என்ஏ வகை வைரஸ்கள் எப்போது உருமாறும், எப்படி தன்னுடைய செல்களை மாற்றிக்கொள்ளும், எப்போது வடிவமைப்பை மாற்றிக்கொள்ளும் என்று யாராலும் கணிக்க முடியாது. COVID -19 ஐ தற்போது பரப்பி வரும் கொரோனா வைரஸ் இதேபோன்ற ஆர்என்ஏ வகை வைரஸ் ஆகும். இதனால்தான் இதை தடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.

மிக கடினம்
இது ஆர்என்ஏ வகை வைரஸ் என்பதால்தான் இதை டெஸ்ட் செய்வதும், அதற்கு மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்பதும் மிக மிக கடினமாக இருக்கிறது. இந்த கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாடுகளுக்கும் பரவும் போதும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஆர்என்ஏவில் உருமாற்றம் அடைந்து அப்டேட் ஆகிறது. அதாவது இந்த வைரஸின் உட்பகுதியில் இருக்கும் புரதங்கள், அதன் வடிவங்கள், செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றம் அடைகிறது.

சீனாவில் தோன்றிய வைரஸ்
உதாரணமாக சீனாவில் வுஹானில் பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்கா சென்ற பின் கொஞ்சம் உருமாற்றம் அடைந்துள்ளது. சீனாவில் இருக்கும் கொரோனாவின் தோற்றமும், அமெரிக்காவில், ஐரோப்பாவில் பரவும் கொரோனாவின் தோற்றமும் ஒரே மாதிரி இல்லை. இதில் சில விஷயங்கள் மாறி இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இப்படி ஆர்என்ஏ வைரஸ் தன்னை அப்டேட் செய்து கொள்வதை Mutation என்று அழைப்பார்கள்.

உருமாற்றம் அடைகிறது
கொரோனா வைரஸ் இப்படித்தான் mutate ஆகிக்கொண்டே இருக்கிறது. தற்போது வரை 4 வகையில் இந்த கொரோனா வைரஸ் mutate ஆகியுள்ளது. அதன்படி சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் வகை 1, அமெரிக்கா
மற்றும் யுனைட்டட் கிங்டமில் பரவி வரும் வைரஸ் வகை 2, ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பரவி வரும் வைரஸ் வகை மூன்று, இத்தாலி, ஸ்பெயினில் பரவி வரும் வைரஸ் வகை 4 ஆகும்.

இந்தியாவில் என்ன நிலை
இதில் இந்தியாவில் மூன்று வகையான கொரோனா பரவி வருகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதலில் பரவிய கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து நேரடியாக வந்தது. அதன்பின் பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவும் வகையை சேர்ந்தது. அதன்பின் தென் மாநிலங்களில் பரவும் கொரோனா வைரஸ் ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பரவும் வகையை சேர்ந்தது.

இந்தியாவில் மாற்றம் நடக்கவில்லை
இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிற்கு நுழைந்த பின் அதன் வடிவத்தில் எந்த மாற்றமும் நடக்கவில்லை. அதாவது இந்தியாவிற்குள் இந்த வைரஸ் mutate ஆகவில்லை. இதனால் தற்போதைக்கு பிரச்சனை இல்லை. அதேபோல் கொரோனா வைரஸ் வேகமாக உருமாற்றம் அடையும் வைரஸ் இல்லை. இதனால் இப்போது கவலை அடைய தேவை இல்லை. ஆனால் தற்போது இந்தியாவில் பரவும் வைரஸ் எந்த வகையை சேர்ந்தது என்று கண்டுபிடிக்க வேண்டும்.

இந்தியாவிற்குள் எங்கிருந்து வந்தது
இந்தியாவில் அதிகமாக பரவும் வைரஸ் அமெரிக்காவில் இருந்து வந்ததா ? ஈரானில் இருந்து வந்ததா? அல்லது சீனாவில் இருந்து வந்ததா என்று கண்டுபிடிக்க வேண்டும். இதன் மூலம்தான் அதை எப்படி கட்டுப்படுத்த முடியும். அதன் குணாதிசயம் என்ன என்று கண்டுபிடிக்க முடியும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாக ஆராய்ச்சி நடக்கிறது. விரைவில் இதன் முடிவுகள் வரும் என்று தெரிவித்துள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications