அந்த கொரோனா கிளஸ்டர்.. தமிழகத்தில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. திடீரென இத்தனை கேஸ்கள் வர இதுதான் காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் அதிகமாக கேஸ்கள் வர என்ன காரணம் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று மிக அதிகமாக 817 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 18545 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் 558 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12198 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்த நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் அதிகமாக கேஸ்கள் வர என்ன காரணம் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தினமும் 600-700 கேஸ்கள் தான் வந்தது. ஒரு நாளுக்கு அதிகமாக 700 கேஸ்கள் மட்டுமே சராசரியாக வந்தது. நேற்று கூட தமிழகத்தில் 624 கேஸ்கள்தான் வந்தது. ஆனால் இன்று தமிழகத்தில் கேஸ்கள் அதிகம் ஆகியுள்ளது. இன்று தமிழகத்தில் 817 கேஸ்கள் வந்துள்ளது.

நேற்று குறைவு

நேற்று குறைவு

நேற்று தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் குறைவான சோதனை செய்யப்பட்டது. இதனால் நேற்று குறைவான கேஸ்கள் வந்தது என்று கூறப்பட்டது. தமிழகத்தில் இன்று குறைவான கொரோனா சோதனைகள்தான் செய்யப்பட்டது. 10661 பேருக்கு மட்டுமே இன்று சோதனைகள் செய்யப்பட்டது. ஆனாலும் கூட இன்று கொரோனா கேஸ்கள் அதிகம் வந்துள்ளது.

மகாராஷ்டிரா கிளஸ்டர் காரணம்

மகாராஷ்டிரா கிளஸ்டர் காரணம்

இதற்கு காரணமாக மகாராஷ்டிரா கிளஸ்டர் என்று கூறுகிறார்கள். மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த நபர்கள் மூலம்தான் இன்று தமிழகத்தில் அதிகமாக கேஸ்கள் வந்துள்ளது. இன்று மொத்தம் 139 கேஸ்கள் வெளி மாநிலத்தில் இருந்து வந்த கேஸ்கள். இதில் 138 கேஸ்கள் மகாராஷ்டிராவில் இருந்து வந்த கேஸ்கள் ஆகும். ஒரே ஒரு கேஸ் கேரளாவில் இருந்து வந்த கேஸ்கள் ஆகும்.

அதிகம் வருகிறது

அதிகம் வருகிறது

இந்த மகாராஷ்டிரா கிளஸ்டர்தான் இப்படி அதிக கேஸ்கள் வர காரணம் ஆகும். இதை கழித்துவிட்டு பார்த்தால் தமிழகத்தில் இன்று உள்ளுக்குள்ளேயே ஏற்பட்ட கேஸ்கள் 678 தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இப்படி வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் மூலம் தினமும் கேஸ்கள் அதிகமாக வருகிறது. இன்று அதில் மிக அதிகமாக வந்துள்ளது. இதுதான் 817 என்ற எண்ணிக்கையை இன்று தமிழகம் தொட காரணம்.

Recommended Video

    நிறைமாத கர்ப்பிணிக்கு ஓடோடி சென்று உதவிக்கரம் நீட்டிய ஆதம்பாக்கம் போலீஸ்
    நல்ல செய்தி என்ன?

    நல்ல செய்தி என்ன?

    ஆனால் இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் இவர்கள் மூலம் தமிழகத்தில் வேறு யாருக்கும் கொரோனா பரவாது. ஏனென்றால் இவர்கள் எல்லோரும் செக் போஸ்டில் சோதனை செய்யப்படும் நபர்கள். செக் போஸ்டிலேயே இவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதனால் இவர்கள் மூலம் ஊருக்கு உள்ளே கொரோனா செல்வது இல்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+