செப்.1 முதல்.. தமிழகத்தில் மீண்டும் ஓடும் பேருந்துகள்.. எப்படி இயக்கப்படும்? விதிமுறைகள் என்ன?
சென்னை: தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பேருந்து போக்குவரத்து மற்றும் சமூக இடைவெளி தொடர்பான கட்டுபாடுகள், விதிமுறைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய அரசு லாக்டவுன் அறிவித்தது. மார்ச் மாதம் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன்பின் தமிழகத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதம் போக்குவரத்து தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும், அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவில்லை. இடையில் மே மாதம் 37 மாவட்டங்களை 8 மண்டலங்களாக அதற்கு உள்ளே மட்டும் போக்குவரத்து அமலில் இருந்தது.

என்ன அறிவிப்பு
இந்த நிலையில் தற்போது செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து தமிழகத்தில் மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் சென்னை பெருநகரப் பேருந்துப் போக்குவரத்து சேவை 1.09.2020 முதல் செயல்படும். நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து
இந்த போக்குவரத்து அனுமதி மாவட்டங்களுக்கு உள்ளே மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் பேருந்து மூலம் மாவட்டங்களை விட்டு வெளியே செல்ல முடியாது. உதாரணமாக திருவாரூருக்குள் பேருந்து மூலம் பயணம் செய்ய முடியும். ஆனால் தஞ்சாவூரில் இருந்து திருவாரூரில் செல்ல அனுமதி கிடையாது. இதற்கு பேருந்து சேவை தொடங்கப்படவில்லை.

குறைந்த எண்ணிக்கை
தற்போது குறைந்த எண்ணிக்கையில்தான் பேருந்து சேவை தொடங்கும் என்கிறார்கள். மொத்தமாக எல்லா பேருந்தும் இப்போதைக்கு இயங்க வாய்ப்பு இல்லை. அதற்கு குறைந்தது 10 நாட்களாவது ஆகும் என்று கூறுகிறார்கள். படிப்படியாக ஊழியர்கள் எல்லோரும் முழுதாக பணிக்கு திரும்பிய பின் முழு போக்குவரத்து தொடங்கும்.

எப்படி இயங்கும்
இதற்காக தற்போது பேருந்துகளை தயார் செய்யும் பணிகள் தொடங்க உள்ளது. நாளை ஒருநாள் மட்டுமே உள்ளது. நாளை மறுநாளுக்குள் வேகமாக பேருந்துகள் தயார் செய்யப்படும். அதே போல பேருந்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்காக சமூக இடைவெளி விவரங்கள், விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications