தமிழகம் முழுவதும் இன்று 93,002 மாதிரிகள் பரிசோதனை - 5,679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,69,370ஆக உயர்ந்துள்ளதாக என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,679 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 5,69,370 பேராக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை 5,13,836 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 72 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9,148ஆக உயர்ந்துள்ளது.

உலகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில் இரண்டரை கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Coronavirus Today updates: TamilNadu today affect 5,679

இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 லட்சத்தை எட்டப்போகிறது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 47 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,69,370 பேராக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 5,679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9,418 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் தொற்று பாதிப்புடன் 46 ஆயிரத்து 386 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.25 சதவிகிதமாக உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 67,01,677 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 93,002 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 182 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,43,470 பேர் ஆண்கள், இன்று மட்டும் 3,455 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,25,870 பேர் பெண்கள், இன்றைய தினம் 2,224 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 30 திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,193 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,60,926 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+