கொரோனா வைரஸ் அச்சம்.. 12 நாட்டு பயணிகள் சென்னை வர அதிரடி தடை
சென்னை: உலகின் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள 12 நாடுகளில் இருந்து சென்னைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இந்தியாவுக்கு வருபவர்களிடம் இருந்து தான் பரவி இருக்கிறது. இதனால் அங்கு இருந்து இந்தியாவுக்கு வருபவர்களை ஸ்கிரீன் டெஸ்ட் எனப்படும் பரிசோதனையை தீவிரமாக மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

இது ஒருபுறம் எனில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 12 நாடுகளில் இருந்து யாராக இருந்தாலும் இந்தியாவுக்கு வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்று மாநிலங்களில் பரவி இருக்கிறது. இதையடுத்து மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி உள்ளது. அதன்படி மத்திய அமைச்சரவை செயலாளர் அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக விமான நிலையங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம்.
சென்னை விமானநிலையத்தில் கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் சோதனை நடந்து வருகிறது. இங்கு சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான் , தென்கொரியா, நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து சோதனை நடந்து வந்தது. தற்போது கூடுதலாக இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாம், ஈரான், இத்தாலி உள்பட மொத்தம் 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிர சோதனை நடத்துகிறோம்.
ஏற்கனவே 28 நாட்கள் கண்காணிக்கப்பில் 1307 பேர் கண்காணிக்கப்பட்டுவருகிறார்கள். மேலும் சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து விமானங்கள் இந்தியாவிற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கு விசா கிடையாது. அந்த 12 நாடுகளில் இருந்து விமானங்களை கட்டுப்படுத்தி குறைத்து வருகிறோம். அந்த நாடுகளில் உள்ள நம்ம நாட்டினர் மட்டுமே வருவதற்கு அனுமதித்து வருகிறோம். மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது நம்மவர்களையும் தீவிரமாக கண்காணித்தே அனுமதிக்கிறோம். கொரோனா சோதனையில் எந்த தொய்வும் இல்லாமல் பணிகள் நடந்த வருகிறது" இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications