தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கொரோனா... சென்னையில் மட்டும் 538 பேருக்கு பாதிப்பு.. விவரம்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவி இருக்கிறது. 17 மாவட்டங்களில் சென்னையில் தான் மிகமிக அதிகமாக 538 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை இல்லாத அளவாக 8002 என்ற உச்சத்தை இன்றைக்கு தொட்டுள்ளது. சென்னையிலும் கொரோனா புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. மொத்த சென்னையில் கொரோனாவால் தினமும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று மட்டும் 538 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3839ல் இருந்து 4371 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவி உள்ளது அரியலூரில் 33 பேர், சென்னையில் 538 பேர், செங்கல்பட்டு 90 பேர், தர்மபுரி 2 பேர், திண்டுக்கல் ஒருவர், காஞ்சிபுரத்தில் 8 பேர், கன்னியாகுமரியல் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மதுரையில் 4 பேர், பெரம்பலூரில் ஒருவர், ராமநாதபுரத்தில் 4 பேர், ராணிப்பேட்டையில் ஒருவர், திருவள்ளூரில் 97பேர், திருவண்ணாமலையில் 10 பேர், தூத்துக்குடியில் 3பேர், வேலூரில் ஒருவர், விருதுநகரில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இன்று.. மேலும் 798 பேருக்கு பாதிப்பு.. 6பேர் மரணம், மொத்தமாக 8002 பேருக்கு தொற்று
8002 பேருக்கு கொரோனா தொற்று தமிழகத்தில் உள்ள நிலையில், எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம்.
- அரியலூர் 308
- செங்கல்பட்டு 356
- சென்னை 4371
- கோவை 146
- கடலூர் 395
- தர்மபுரி 6
- திண்டுக்கல் 109
- ஈரோடு 70
- கள்ளக்குறிச்சி 59
- காஞ்சிபுரம் 132
- கன்னியாகுமரி 25
- கரூர் 48
- கிருஷ்ணகிரி 20
- மதுரை 121
- நாகப்பட்டினம் 45
- நாமக்கல் 77
- நீலகிரி 14
- பெரம்பலூர் 105
- புதுக்கோட்டை 6
- ராமநாதபுரம் 30
- ராணிப்பேட்டை 67
- சேலம் 35
- சிவகங்கை 12
- தென்காசி 52
- தஞ்சாவூர் 69
- தேனி 59
- திருப்பத்தூர் 28
- திருவள்ளூர் 440
- திருவண்ணாமலை 92
- திருவாரூர் 32
- தூத்துக்குடி 33
- திருநெல்வேலி 90
- திருப்பூர் 114
- திருச்சி 65
- வேலூர் 33
- விழுப்புரம் 298
- விருதுநகர் 40