சென்னை கிரவுண்டில் கவனம் ஈர்த்த மஞ்சள் பதாகை.. கொண்டாடும் திமுகவினர்.. எழுதியிருந்த மேட்டர் இதுதான்!
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே - மும்பை அணிகள் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது, ரசிகர் ஒருவர் '2 Years of திராவிட மாடல்' என பதாகை ஏந்தியிருந்தார். திமுகவினர் இப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு திமுகவினர் அதனைச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நலத் திட்டங்கள், நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றை அவர்கள் பட்டியலிட்டு கொண்டாடி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கும் புகைப்படக் காட்சியை இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். "இரண்டாண்டு ஆட்சி, இரட்டிப்பு மகிழ்ச்சி. தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி, சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது திராவிட மாடல் ஆட்சி' என திமுகவினர் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியோடு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐபிஎல் 2023 தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ல் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி மும்பை அணியை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்தப் போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் ஒருவர் '2 Years of திராவிட மாடல்' என மஞ்சள் நிற பதாகையில் எழுதி, போட்டியின்போது காட்டினார். திமுகவினர் இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications