இலங்கையில் கரையை கடந்து, தமிழகத்தின் வழியே பயணிக்கும் புரேவி புயல்.. தென் மாவட்டங்களில் அலர்ட்
சென்னை: புதிதாக உருவாகும் புரேவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் பெரும் மழை பெய்யும் என்பதால், தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
புரேவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, இன்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அவர் கூறியதாவது:
வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறும் நிலையில், ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனடியாக கடற்கரைக்கு திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீர் நிலைகள்
செயற்கைகோள் தொலைபேசி மூலமாக அவர்களை கரை திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு நிவாரண முகாம்கள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்படும். நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். நீர்நிலைகளில் உள்ள உபரி நீரை முன்கூட்டியே வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

நாகர்கோவிலில் தேசிய பேரிடர் மீட்பு படை
இதற்காக, அதிகாரிகள் குழு தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். இதனிடையே புயல் முன்னெச்சரிக்கையாக 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள், இன்று, கன்னியாகுமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவில் சென்றடைந்துள்ளனர்.

இன்று மழை பெய்யும் இடங்கள்
புரேவி புயல், இன்று இரவு அல்லது நாளை அதிகாலை இலங்கையின் திரிகோணமலை பகுதி வழியாக கரையை கடந்து, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்கள் மேலே பயணித்து, அரபிக் கடலை சென்று அடையும். இதையடுத்து, இன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். அதே நேரம், நாளை, டிசம்பர் 2ம் தேதி, தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் அதீத கன மழை பெய்யும்.

தென் மாவட்டங்களில் அதீத கன மழை
புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன மழையும் பெய்யும். தெற்கு கடலோர மாவட்டங்களிலும், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலும், மணிக்கு, 65 கி.மீ. வேகம் வரை, சூறாவளி காற்று வீசும் வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications