அக்னி நட்சத்திர காலத்தில் உருவாகும் புயல்..வடக்கு நோக்கி நகரும்..வானிலை ஆய்வு மையம்
சென்னை: அக்னி நட்சத்திரம் இன்று ஆரம்பிக்கும் நிலையில் அனலை தணிக்க புயல் உருவாகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மே 8ம் தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று இணைவதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்தது.

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நேற்று பிற்பகலில் கனமழை பெய்தது.
சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளில் மரங்கள் விழுந்ததால், சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழையானது இன்றும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடதமிழகத்தில் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தொடங்கி 7ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், கரூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், கடலூர், திருச்சி, திருவள்ளூர், ஈரோடு, நாமக்கல், மாவட்டங்களில் நேற்று 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்து காணப்பட்டது. அதேபோல, கடலூர், திருப்பத்தூர், வேலூர், மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியசும். நீலகிரி, கரூர், திண்டுக்கல், ஈரோடு, மதுரை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியசும், சென்னை, திருவள்ளூர், பகுதிகளில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்து காணப்பட்டது.

எனினும் வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரியில் வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் உயரக்கூடும். இந்நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
மே 8ம் தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அது வலுப்பெற்று வடக்கு நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வின் காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 கிமீ முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 7ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். சில நேரங்களில் 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
-
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications