முறையாக பதிவு செய்ய மருத்துவமனைகளுக்கு கெடு.. அதிரடிக்கு தயாராகும் சுகாதாரத்துறை அதிகாரிகள்
சென்னை: தமிழகத்தில் முறையாக பதிவு செய்யப்படாத மருத்துவமனைகள், கிளினிக்குகள் உள்ளிட்டவற்றை மூடும் முயற்சியில் சுகாதார துறை இறங்கியுள்ளது.
தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவம் சார்ந்த நிறுவனங்களும், 2018 தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

மேற்கண்ட சட்டத்தின் கீழ் பதிவு செய்தால் மட்டுமே, கிளினிக்குகள், மருத்துவ ஆய்வகங்கள், தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் ஆகியவை தொடர்ந்து இயங்க அரசு அனுமதிக்கும்.
இதற்காக மார்ச் 31 வரை முன்பு கெடு விதிக்கப்பட்டிருந்தது. பல மருத்துவ நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, இந்த கெடு தற்போது மே 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய மருத்துவ நிறுவனங்களுக்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது பற்றி தகவல் தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், புதிய சட்டத்தின் கீழ் மருத்துவ நிறுவனங்கள் தங்களை பதிவு செய்து கொள்வதற்கு கீழ்கண்ட அம்சங்கள் அவசியம். போதிய இட வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிப்பிடம், ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான ஊழியர்கள் இருத்தல் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
மேலும் கிராமங்களில் இருக்கும் லேப்கள் குறைந்தபட்சம் 500 சதுர அடி பரப்பிலும், நகரங்களில் இருக்கும் லேப்கள் குறைந்தபட்சம் 700 1,500 சதுர அடி பரப்பிலும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில், மருத்துவ சேவைகள் இயக்குனரகத்தின் 3 குழுக்கள் இதுதொடர்பான சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதாரத்துறையில் முறையாகப் பதிவு செய்யாத மருத்துவமனைகள், கிளினிக்குகளை கண்டறிந்து அவற்றை இழுத்து மூட அதிகாரிகள் தயாராகி வருகின்றனர் . அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு முன் விரைந்து உரிய முறையில் பதிவு செய்யும் பட்சத்தில், மருத்துவ நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரச்சனையின்றி இயங்க உரிமம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications