கவனம்.. கிரெடிட், டெபிட் கார்ட்.. ஆட்டோ பேமெண்ட் விதிகளை அதிரடியாக மாற்றிய ஆர்பிஐ.. ரொம்ப முக்கியம்!
சென்னை: கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் ஆட்டோ பேமெண்ட் விதிகளில் சில முக்கியமான மாற்றங்களை ஆர்பிஐ மேற்கொண்டுள்ளது.
ஆர்பிஐ சார்பாக இரண்டு மாதத்தில் இரண்டாவது முறையாக ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ரெப்போ விகிதம் 0.40 சதவிகிதம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று இருநாள் நாணய கொள்கை கூட்டம் முடிந்த பின் பேசிய ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதம் 0.50 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

ரெப்போ விகிதம்
இதனால் ரெப்போ விகிதம் 4.90% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அதே சமயம் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல முறை ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டது. இதனால் ரெப்போ விகிதம் இன்னும் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டிலேயே உள்ளது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இன்று பேசிய ஆர்பிஐ கவர்னர் வேறு சில முக்கியமான அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதன்படி, கிரெடிட், டெபிட் கார்ட் மூலம் செலுத்தப்படும் ஆட்டோ கட்டணங்களின் அதிகபட்ச தொகையை ஆர்பிஐ மாற்றி உள்ளது.

ஆட்டோ பேமெண்ட்
கிரெடிட் கார்டுகளில் ஆட்டோ பேமெண்ட் வசதி இருக்கும். அதேபோல் டெபிட் கார்டுகளிலும் ஆட்டோ பேமெண்ட், வாலட் வசதிகள் இருக்கும். தற்போது மக்கள் பயன்படுத்தும் ஓடிடி தளங்கள், டேட்டிங் தளங்கள், பல்வேறு பில் பேமெண்ட் சேவைகள், அத்தியாவசிய சேவைகள் பல இந்த ஆட்டோ பேமெண்ட் வசதியை பயன்படுத்தியது. இதற்கு இ mandate ல் நீங்கள் அனுமதி தர வேண்டும். கிரெடிட் கார்ட் பில்லிங்கில் ஆட்டோ டிடெக்சன் கொடுத்திருந்தாலும், அதில் ஆட்டோ பேமெண்ட் நடக்கும்.

அதிகபட்சம் எவ்வளவு
ஆனால் இதற்கு உட்சபட்ச தொகையாக 5000 ரூபாய் மட்டுமே இருந்தது. அதாவது அதிகபட்ச ஆட்டோ பேமெண்ட் 5000 ரூபாய்க்கு மேல் போகாது. அதற்கு மேல் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஓடிபி கொடுக்க வேண்டும். வாடிக்கையாளரிடம் ஓடிபி அனுமதி பெற்றால் மட்டுமே 5000 ரூபாய்க்கு மேல் ஆட்டோ பேமெண்ட் செய்யலாம் என்ற வசதி இருந்தது. தேவை இல்லாத சேவைகளுக்கு இது ஒரு வகையில் கிரெடிட், டெபிட் கார்ட் பயனாளிகளுக்கு பாதுகாப்பு அளித்தது.

மாற்றம்
ஒரே மாதத்தில் ஆட்டோ பேமெண்டில் பல ஆயிரங்களை இழக்காமல் இருக்கும் பாதுகாப்பை அளித்தது. தற்போது இந்த உச்ச வரம்பு 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 ஆயிரம் அளவிலான பெரிய தொகைகளை ஓடிபி இல்லாமல் ஆட்டோ பேமெண்ட்டாக செலுத்த முடியும். அதாவது 15 ஆயிரம் வரை கூட உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து ஆட்டோ பேமெண்டிற்காக பணம் எடுக்கப்பட முடியும். இதற்கு ஒரு முறை இ mandate செய்தால் போதும். ஒவ்வொரு முறையும் ஓடிபி கொடுக்க வேண்டியது இல்லை.
இதனால் இன்சூரன்ஸ் பேமெண்ட் போன்றவர்களை எளிதாக இனி மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications