கவனம்.. கிரெடிட், டெபிட் கார்ட்.. ஆட்டோ பேமெண்ட் விதிகளை அதிரடியாக மாற்றிய ஆர்பிஐ.. ரொம்ப முக்கியம்!
சென்னை: கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் ஆட்டோ பேமெண்ட் விதிகளில் சில முக்கியமான மாற்றங்களை ஆர்பிஐ மேற்கொண்டுள்ளது.
ஆர்பிஐ சார்பாக இரண்டு மாதத்தில் இரண்டாவது முறையாக ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ரெப்போ விகிதம் 0.40 சதவிகிதம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று இருநாள் நாணய கொள்கை கூட்டம் முடிந்த பின் பேசிய ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதம் 0.50 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

ரெப்போ விகிதம்
இதனால் ரெப்போ விகிதம் 4.90% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அதே சமயம் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல முறை ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டது. இதனால் ரெப்போ விகிதம் இன்னும் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டிலேயே உள்ளது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இன்று பேசிய ஆர்பிஐ கவர்னர் வேறு சில முக்கியமான அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதன்படி, கிரெடிட், டெபிட் கார்ட் மூலம் செலுத்தப்படும் ஆட்டோ கட்டணங்களின் அதிகபட்ச தொகையை ஆர்பிஐ மாற்றி உள்ளது.

ஆட்டோ பேமெண்ட்
கிரெடிட் கார்டுகளில் ஆட்டோ பேமெண்ட் வசதி இருக்கும். அதேபோல் டெபிட் கார்டுகளிலும் ஆட்டோ பேமெண்ட், வாலட் வசதிகள் இருக்கும். தற்போது மக்கள் பயன்படுத்தும் ஓடிடி தளங்கள், டேட்டிங் தளங்கள், பல்வேறு பில் பேமெண்ட் சேவைகள், அத்தியாவசிய சேவைகள் பல இந்த ஆட்டோ பேமெண்ட் வசதியை பயன்படுத்தியது. இதற்கு இ mandate ல் நீங்கள் அனுமதி தர வேண்டும். கிரெடிட் கார்ட் பில்லிங்கில் ஆட்டோ டிடெக்சன் கொடுத்திருந்தாலும், அதில் ஆட்டோ பேமெண்ட் நடக்கும்.

அதிகபட்சம் எவ்வளவு
ஆனால் இதற்கு உட்சபட்ச தொகையாக 5000 ரூபாய் மட்டுமே இருந்தது. அதாவது அதிகபட்ச ஆட்டோ பேமெண்ட் 5000 ரூபாய்க்கு மேல் போகாது. அதற்கு மேல் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஓடிபி கொடுக்க வேண்டும். வாடிக்கையாளரிடம் ஓடிபி அனுமதி பெற்றால் மட்டுமே 5000 ரூபாய்க்கு மேல் ஆட்டோ பேமெண்ட் செய்யலாம் என்ற வசதி இருந்தது. தேவை இல்லாத சேவைகளுக்கு இது ஒரு வகையில் கிரெடிட், டெபிட் கார்ட் பயனாளிகளுக்கு பாதுகாப்பு அளித்தது.

மாற்றம்
ஒரே மாதத்தில் ஆட்டோ பேமெண்டில் பல ஆயிரங்களை இழக்காமல் இருக்கும் பாதுகாப்பை அளித்தது. தற்போது இந்த உச்ச வரம்பு 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 ஆயிரம் அளவிலான பெரிய தொகைகளை ஓடிபி இல்லாமல் ஆட்டோ பேமெண்ட்டாக செலுத்த முடியும். அதாவது 15 ஆயிரம் வரை கூட உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து ஆட்டோ பேமெண்டிற்காக பணம் எடுக்கப்பட முடியும். இதற்கு ஒரு முறை இ mandate செய்தால் போதும். ஒவ்வொரு முறையும் ஓடிபி கொடுக்க வேண்டியது இல்லை.
இதனால் இன்சூரன்ஸ் பேமெண்ட் போன்றவர்களை எளிதாக இனி மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications