சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரம்.. திருவிக நகரில் உச்சம்
சென்னை: சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. திருவிக நகர் மண்டலத்தில் அதிகபட்சமாக 324 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரு நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சென்னையில் மட்டும் நேற்று ஒரு நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதான் சென்னையில் ஒரு நாளில் ஏற்பட்ட உச்சபட்ச பாதிப்பு ஆகும்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கோயம்பேடு காய்கறி சந்தைகளில் இருந்து 119 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. இதேபோல் சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் தன்னார்வலர் மூலம் 52 பேருக்கு கொரோனா பரவி உள்ளது.
இந்நிலையில் இதுவரை சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் மண்டல வாரியான விவரம் வெளியாகி உள்ளது. திருவிக நகர் மண்டலத்தில் அதிகபட்சமாக 324 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இராயபுரம் மண்டலத்தில் 275 பேருக்கும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 199 பேருக்கும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 166 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
அண்ணா நகர் மண்டலத்தில் 130 பேருக்கும், தண்டடையார் பேட்டை மண்டலத்தில் 118 பேருக்கும், வளசரவாக்கம் மண்டலத்தில் 92 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது.

அம்பத்தூர் மண்டலத்தில் 58 பேருக்கும், அடையாறில் 29 பேருக்கும், திருவொற்றியூர் மண்டலத்தில் 22 பேருக்கும், ஆலந்தூரில் 10 பேருக்கும், பெருங்குடியில் 10 பேருக்கும், மாதவரத்தில் 9 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 6 பேருக்கும், மணலி மண்டலத்தில் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போதைய நிலையில் 1458 பேர் கொரோனா பாதித்த நிலையில் தற்போது 1190 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications